ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், Indian Railways நாடு முழுவதும் பயணக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 26, 2025 முதல் அமலுக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மற்றும் தினசரி பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பின்படி:
இருப்பினும்,
ஆகியோருக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தூரங்களுக்கு:
இதற்கு மேலாக, GST, முன்பதிவு கட்டணம் உள்ளிட்டவை வழக்கம்போல் வசூலிக்கப்படும், இதனால் மொத்த டிக்கெட் விலையில் சிறிய அளவில் மேலும் மாற்றம் ஏற்படும்.
இந்த கட்டண உயர்வு மூலம், மார்ச் 2026க்குள் சுமார் ₹600 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்ல திட்டமிடும் மக்களுக்கு, இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார சுமையாகவே பார்க்கப்படுகிறது.
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள கோசாகுளம் கண்மாய் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக ஆத்திகுளத்தைச் சேர்ந்த ஜெ.கனகராஜ் தமிழக முதல்வருக்கு…
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 24ஆம் தேதி வெளியிடப்பட்ட…
மதுரை மாவட்டத்தின் 220வது மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி நிஷாந்த் கிருஷ்ணா ஜூன் 22ஆம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகத்தில்…
மதுரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நகரின் முக்கிய சாலைகளில் தானியங்கி எண்…
மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்படும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் AAI Cargo Logistics and…
மதுரை நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் Madurai Railway Station, உலகத் தரத்துக்கு உயர்த்தும் மறுசீரமைப்பு பணிகளில் 50…