கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்,
திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.
மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய திங்கட்கிழமைகளில்,
தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
விடுமுறை காலத்தில் தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…