கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்,
திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.
மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய திங்கட்கிழமைகளில்,
தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
விடுமுறை காலத்தில் தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…