கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில், டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில்,
திருநெல்வேலியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாகச் செல்லும்.
மறுமார்க்கமாக, இந்த சிறப்பு ரயில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 ஆகிய திங்கட்கிழமைகளில்,
தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு,
மறுநாள் அதிகாலை 4.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இந்த ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும்.
விடுமுறை காலத்தில் தென் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த சிறப்பு ரயில் சேவை பெரும் உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…