திருவிழாக்கள்

சித்திரைத் திருவிழா

மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையாக இருந்தது. இதனால், அவர்கள் சிவபெருமானிடம் குழந்தை பெற வேண்டி ஆராதனை செய்தனர். சிவபெருமானின் அருளால், மீனாட்சி யாகசாலையில் அக்னியில் தோன்றி அவதரித்தார். இதனால், “அங்கயர் கன்னி” என்ற பெயரும் பெற்றார்.

மீனாட்சி அம்மனுக்கு பிறப்பிலேயே மூன்று மார்புகள் காணப்பட்டன. மணம் முடிப்பவரை அவை மறைந்து விடுவதாக கூறப்படுகிறது. கயிலை மலையில் சிவபெருமானை பார்த்தவுடன், அந்த மத்திய மார்பு மறைந்து விடுகிறது. இதனை உணர்ந்த மீனாட்சி, சிவபெருமானுக்கு காதல் கொள்கிறார், இதன் பின்னர் சிவபெருமானும் சுந்தரேஸ்வரராக அவளை மணம் முடிக்கிறார்.

மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை மரகதக் கல்லால் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலின் அமைப்பைத் தேவந்திரன் செய்ததாகவும், குலசேகர பாண்டியர் கட்டியதாகவும் கூறப்படுகிறது. இக்கோவிலில் முதலில் மீனாட்சி அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன, அதன் பின்னர் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகின்றன.

மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் சித்திரை மாதத்தில் நடைபெற்றது. கள்ளழகர், மதுரையில் சோழவந்தான் அருகில் உள்ள தேனூர் பகுதியில் முதலில் ஆற்றில் இறங்கினார். அங்கு தவளை முனிவருக்கு சாபம் விமோசனம் வழங்கினார் என்பதுதான் வரலாற்றின் பகுதி.

பாண்டியர் ஆட்சிக் காலத்தில், மீனாட்சி கல்யாணமும், பட்டாபிஷேகமும் வெவ்வேறு மாதங்களில் நடந்ததாக கூறப்படுகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் தைப்பூசத்தில், பட்டாபிஷேகம் மற்றும் தேரோட்டம் மாசி மாதத்திலும் நடைபெற்றது.

சைவ சமயத்தினர், மீனாட்சி திருக்கல்யாணத்தை கொண்டாடினார்கள், அதேபோன்று வைணவ சமயத்தினரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை கொண்டாடினார்கள்.

திருமலை நாயக்கர், வைணவ சமயத்தை பின்பற்றினாலும், மீனாட்சி அம்மனின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் மதுரைக்கு பல திருப்பணிகளைச் செய்து கொடுத்தார், ஒரு பெரிய தேரை கொடுத்தார். இந்த தேரை இழுக்க மக்கள் சிரமப்பட்டனர், இதனால் அடுத்த ஊர்களில் இருந்து மக்கள் வரவேற்கப்பட்டனர்.

திருமலை நாயக்கர், மீனாட்சி திருக்கல்யாணம், பட்டாபிஷேகம், தேரோட்டம் மற்றும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகத்தை ஒன்றிணைத்து சித்திரை திருவிழாவை மிகுந்த பெருமையுடன் கொண்டாடினார். இவ்வாறு, அவர் சமய வேறுபாடுகளை கண்டு மக்களை ஒன்று சேர்க்கும் வழி முறைகளை உருவாக்கினார்.

Thoonganagaram Admin

Share
Published by
Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

6 மணி நேரங்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

6 மணி நேரங்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

7 மணி நேரங்கள் ago

செம வாய்ப்பு! IOB வங்கியில் வேலை – தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப…

7 மணி நேரங்கள் ago

மே 20, 2025 மதுரையில் தங்கம் விலை பெரும் சரிவு

மதுரை / கோவை:இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சரிவும் ஏற்றமும் காணப்பட்ட நிலையில்,…

7 மணி நேரங்கள் ago

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான…

1 வாரம் ago