தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (பிப்.21) மதுரைக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு வளர்ச்சி திட்டங்களை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 10.10 மணிக்கு மதுரை விமான நிலையம் சென்றடைகிறார். தொடர்ந்து வடயமஞ்சியில் அமைந்துள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்காவிற்கு சென்று, காலை 11.35 மணிக்கு பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மையக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். இந்த பயணத்தை முன்னிட்டு மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மதுரை விமான நிலையம், வடயமஞ்சி எல்காட் தொழில்நுட்பப் பூங்கா, தமுக்கம்–நெல்பேட்டை அண்ணா சிலை பகுதி, சிவகங்கை, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி, வண்டியூர் கண்மாய், உத்தங்குடி, காந்தி நினைவு அருங்காட்சியகம்.
பின்னாகிள் திறன் மேம்பாட்டு மையம், ரூ.190.4 கோடி மதிப்பிலான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயர்நிலைப் பாலம் (1.1 கி.மீ.), மருது சகோதரர்கள் உருவச் சிலைகள் (காணொலி மூலம்), மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகம், வண்டியூர் கண்மாய் பூங்கா, அங்குரன் அறிவியல் மையம், பேரூராட்சிகளின் புதிய அலுவலகக் கட்டடம், 867 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தல், போக்குவரத்து மாற்று வழிகள் அறிவிப்பு, போலீஸ் கண்காணிப்பு, நிகழ்ச்சி தளங்களில் தடுப்புகள் அமைத்தல்.
மாலை 4 மணிக்கு மதுரை உத்தங்குடியில் திமுக தென் மண்டல வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம், காந்தி நினைவு அருங்காட்சியக நிகழ்ச்சி, இரவு 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை திரும்புதல்.
முதல்வரின் பயணத்தை முன்னிட்டு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…