சமீபத்திய

மாவட்ட வளர்ச்சிக்கு ஸ்டாலின் அறிவித்த ஆறு முக்கிய முயற்சிகள்

மதுரை மாவட்ட வளர்ச்சியை முன்னெடுக்க, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறு புதிய முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் குறைப்பு முதல் ஏரிகள், கால்வாய்கள், சாலைகள் மேம்பாடு வரை பல்வேறு துறைகளில் செயல்திறன் மிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

1. போக்குவரத்து நெரிசல் குறைக்கும் புதிய சாலை – ₹130 கோடி

வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலை ₹130 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. இது மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்.

2. பழைய பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றம்

மீனாட்சியம்மன் கோயில் நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், அண்ணா நகர், புதூர், தெற்குவாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பழைய சாக்கடை குழாய்கள் அகற்றி புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

3. உத்தங்குடி உபரிநீர் கால்வாயில் தடுப்புச் சுவர் – ₹7 கோடி

மதுரை கிழக்கு பகுதியில் உள்ள உத்தங்குடி உபரி நீர்க்கால்வாயில் ₹7 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்.

4. கண்மாய் புனரமைப்பு & புதிய தடுப்பணை – ₹12.10 கோடி

மேலூர் வட்டத்தில் கேசம்பட்டி, பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதனைச் சார்ந்த கண்மாய்கள் ₹2.60 கோடியில் புனரமைக்கப்படுகின்றன. சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ₹9.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.

5. ஏரிகள் மற்றும் கால்வாய்கள் மேம்பாடு – ₹10 கோடி

கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ₹10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன.

6. மதுரை முக்கிய சாலைகள் மேம்பாடு – ₹150 கோடி

வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள

  • சாத்தையார் அணை–வைகாசிப்பட்டி சாலை
  • முடுவார்பட்டி–சல்வார்பட்டி சாலை
  • பாலமேடு–வேம்பரலை சாலை
    இவற்றை மேம்படுத்த ₹150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Thoonganagaram Admin

Recent Posts

கொடியேற்றத்துடன் தொடங்கிய கள்ளழகர் ஆடித் திருவிழா

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…

20 மணி நேரங்கள் ago

மதுரையில் 2,000 ஆண்டு தாழிப்பானை கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…

2 நாட்கள் ago

மதுரையில் ஜூலை 24 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை திட்டமிட்ட மின்தடை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

திண்டுக்கல் வழித்தடம் தவிர்த்து ரயில்கள் இயக்கம்

தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…

6 நாட்கள் ago

அழகர் கோவிலில் ஆடித் திருவிழா ஜூலை 21ல் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…

7 நாட்கள் ago