மதுரை மாவட்ட வளர்ச்சியை முன்னெடுக்க, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறு புதிய முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் குறைப்பு முதல் ஏரிகள், கால்வாய்கள், சாலைகள் மேம்பாடு வரை பல்வேறு துறைகளில் செயல்திறன் மிக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
வைகை ஆற்றின் வடகரையில் விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய சாலை ₹130 கோடி மதிப்பில் அமைக்கப்படுகிறது. இது மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்.
மீனாட்சியம்மன் கோயில் நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், அண்ணா நகர், புதூர், தெற்குவாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பழைய சாக்கடை குழாய்கள் அகற்றி புதிய அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
மதுரை கிழக்கு பகுதியில் உள்ள உத்தங்குடி உபரி நீர்க்கால்வாயில் ₹7 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்பு சுவர் கட்டப்படும்.
மேலூர் வட்டத்தில் கேசம்பட்டி, பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதனைச் சார்ந்த கண்மாய்கள் ₹2.60 கோடியில் புனரமைக்கப்படுகின்றன. சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே ₹9.50 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம், விளாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ₹10 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படுகின்றன.
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தில் உள்ள
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…