சமீபத்திய

இந்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை – ஆந்திர துணை முதல்வரின் குற்றச்சாட்டு

கார்த்திகை தீபத்தின் புனித நொடி இந்த வருடம் திருடப்பட்டுவிட்டதாகவும், தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு நீதி கிடைக்காமல் வருவதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தீர்ப்பு வழங்கப்படும் முன்பே காவல்துறையை குவித்து தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கை, இந்து சமூகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீபம் ஏற்றுவதற்கு மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் இரண்டு முறை உத்தரவிட்டிருந்தாலும், அதை நடைமுறைப்படுத்தாத திமுக அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்ததுடன், தற்போது உச்சநீதிமன்ற விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், பவன் கல்யாண் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆறு அறுபடை வீடுகளில் முதல்வீடு திருப்பரங்குன்றம். அங்குள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது இந்து மக்களின் பாரம்பரிய வழக்கம். ஆனால், அந்த வழிபாடு செய்யவும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமானது.

நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற பின்னரும், தங்களது எளிய சடங்குகளை கூட இந்துக்கள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருப்பது உண்மையிலேயே கேள்விக்குறி. தீபத்தை தீபத்தூணில் ஏற்ற வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக உறுதி செய்துள்ளது.

முதலில் தனி நீதிபதி, பின்னர் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு — இரு தரப்பிலும் இந்துக்களின் உரிமை சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டது. இருந்தும், நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என நிர்பந்திக்கப்படுவது ஏன்?

இவ்வாறு வேறு எந்த மத நிகழ்ச்சியையும் தள்ளிப்போட முடியுமா? குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய புனித நிகழ்ச்சியை மாற்றி வேறு தேதியில் செய்யச் சொல்ல முடியுமா?”

அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, மத பாரம்பரியங்களை அசைக்கவும், கேலிச்செய்யவும் சிலருக்கு தைரியம் வருகிறது; ஆனால் இதே அணுகுமுறை மற்ற மதங்களுக்கு எதிராக நடக்காது. மத சுதந்திரத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பு உரிமையே புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

பவன் கல்யாண் இறுதியில், “இனி ஒன்றுபடாவிட்டால் இந்து என்ற உணர்வையே நாம் இழந்துவிடுவோம். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை, காமாக்யா முதல் துவாரகா வரை — இந்துக்கள் எழும் நாள் வரும்,” என பதிவை முடித்துள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் – கைலாச காட்சியில் திருவிழா களைகட்டியத்து

மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…

14 மணி நேரங்கள் ago

சித்திரை விழா இரண்டாம் நாள் வெகு சிறப்பு

சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…

2 நாட்கள் ago

கொடியேற்றம், சிம்ஹாசனம், வாகன சேவை–முதல் நாள் கோலாகலம்

மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…

2 நாட்கள் ago

மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…

5 நாட்கள் ago

Track Meenakshi Amman – மதுரை சித்திரை திருவிழா 2026 | மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் வீதி உலா Live Tracking

நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…

5 நாட்கள் ago

Track Alagar | மதுரை சித்திரை திருவிழா 2026 – கள்ளழகர் இருக்கும் இடம் Live Tracking

நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…

5 நாட்கள் ago