மதுரை மாநகராட்சியில் ஏற்பட்ட கட்சி உள்போரால், அங்கு இடம்பெறும் பரபரப்பான மாற்றங்கள் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்தின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நிதியமைச்சர் ப. தியாகராஜனின் ஆதரவாளரான 57-வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராணி பொன் வசந்த், மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நிஜ மேயர் பதவியில் இருந்தாலும், நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டு வந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
அரசு ஒப்பந்தங்கள், கடை அனுமதிகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் அவரின் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், அவர் தான் நகராட்சி நிர்வாகத்தை இயக்குகிறார் என்ற புகார்கள் தலைமைக்கு சென்றன. இது மட்டுமின்றி, திமுக உறுப்பினர்களே அவருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது கட்சிக்குள்ளேயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மே 29ம் தேதி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில்,
“57வது வார்டைச் சேர்ந்த பொன் வசந்த், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்”
என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக நிர்வாகிகளுடனான “உடன்பிறப்பே வா” ஒன்-டூ-ஒன் சந்திப்பின் போது,
“தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன்”
எனக் கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது.
இதன் பின், மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்யும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுகவின்
🔍 சுருக்கமாக:
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…