சமீபத்திய

அண்ணன்-தம்பி சந்திப்பு அரசியல் உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?

முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென லேசான தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது மூத்த சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மு.க. தமிழரசுவும் உடனிருந்தார்.

70 வயதான ஸ்டாலின், தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று காலை நடைப்பயிற்சிக்கிடையே லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வழக்கமான பரிசோதனை எனத் தெரிவிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது நிலை குறித்து முழுமையான தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனையில் உடனிருக்கின்றனர்.

முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய முக்கியஸ்தர்கள், மேலும் மாநிலத் தலைவர்கள் என பலரும் கேட்டறிந்துள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

“முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வு தேவையென மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவில் இருந்து 2014-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட மு.க. அழகிரி, தனது தம்பி ஸ்டாலினை நேரில் சந்தித்தது முக்கிய அரசியல் பரிசீலனைகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் நேரடி தொடர்பு குறைவாக இருந்த நிலையில், இப்போது ஏற்பட்ட இந்த நேரடி சந்திப்பு, குடும்ப ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும் சாத்தியம் குறித்து பேசப்படுகின்றது.

இதற்கு முன், ஸ்டாலின் தனது அண்ணனின் மகன் துரை தயாநிதி சிகிச்சை பெற்றபோது நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும், உதயநிதி முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு அழகிரியின் குடும்பத்தை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கவை.

தற்போது அழகிரியின் நேரடி வருகை, ஸ்டாலின் உடல்நிலையில் கவலைக்குரிய மாற்றமா அல்லது குடும்ப உறவுகளில் மீண்டும் ஒரு அண்மிப்பு ஏற்படுகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரை மீனாட்சி கோவிலில் நாளை முதல் சிறப்பு பூஜைகள்!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…

2 மணி நேரங்கள் ago

இன்று மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…

1 நாள் ago

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி வெளியானது

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…

3 நாட்கள் ago

கும்பாபிஷேக ஏற்பாடு செப்.11 முதல் மூலவர் தரிசனம் இல்லை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…

4 நாட்கள் ago

செப்.3 காலை 9.30 மணிக்கு அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…

5 நாட்கள் ago

சோலமலை பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), மதுரை

1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…

7 நாட்கள் ago