சமீபத்திய

அண்ணன்-தம்பி சந்திப்பு அரசியல் உறவுகளில் புதிய அத்தியாயம் தொடங்குகிறதா?

முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென லேசான தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது மூத்த சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் மு.க. தமிழரசுவும் உடனிருந்தார்.

70 வயதான ஸ்டாலின், தினமும் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று காலை நடைப்பயிற்சிக்கிடையே லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இது வழக்கமான பரிசோதனை எனத் தெரிவிக்கப்பட்டபோதும், பின்னர் அவரது நிலை குறித்து முழுமையான தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோர் மருத்துவமனையில் உடனிருக்கின்றனர்.

முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய முக்கியஸ்தர்கள், மேலும் மாநிலத் தலைவர்கள் என பலரும் கேட்டறிந்துள்ளனர். அமைச்சர்கள் துரைமுருகன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில்,

“முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வு தேவையென மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர் மருத்துவமனையில் இருந்தபடியே சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார். பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவில் இருந்து 2014-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட மு.க. அழகிரி, தனது தம்பி ஸ்டாலினை நேரில் சந்தித்தது முக்கிய அரசியல் பரிசீலனைகளுக்கு வழிவகுக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இருவருக்கும் நேரடி தொடர்பு குறைவாக இருந்த நிலையில், இப்போது ஏற்பட்ட இந்த நேரடி சந்திப்பு, குடும்ப ஒற்றுமை மீண்டும் வலுப்பெறும் சாத்தியம் குறித்து பேசப்படுகின்றது.

இதற்கு முன், ஸ்டாலின் தனது அண்ணனின் மகன் துரை தயாநிதி சிகிச்சை பெற்றபோது நேரில் சந்தித்து நலம் விசாரித்ததும், உதயநிதி முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கு அழகிரியின் குடும்பத்தை வரவேற்றதும் குறிப்பிடத்தக்கவை.

தற்போது அழகிரியின் நேரடி வருகை, ஸ்டாலின் உடல்நிலையில் கவலைக்குரிய மாற்றமா அல்லது குடும்ப உறவுகளில் மீண்டும் ஒரு அண்மிப்பு ஏற்படுகிறதா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

லஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள் அமைச்சர் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…

2 நாட்கள் ago

மதுரைக்கு குடிநீர் நெருக்கடி அபாயம் முல்லைப் பெரியாறில் குறைந்த நீர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…

3 நாட்கள் ago

மதுரை பாலிடெக்னிக்கில் 2026–27 சேர்க்கை தொடங்கியது

மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…

4 நாட்கள் ago

பல ஆண்டுகளாக பாழடைந்த குடியிருப்புகள்… அதிகாரிகள் அலட்சியமா?

மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை மின்தடை வெளியான முழு பட்டியல்

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

மதுரை–சென்னை டிக்கெட் ரூ.17 ஆயிரம் தாண்டியது

கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…

6 நாட்கள் ago