2024-25 நிதியாண்டுக்கான சொத்து வரி வசூலை அதிகரிக்க முயற்சியாக, மதுரை மாநகராட்சி, வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், வரும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தும் நபர்களுக்கு 5% தள்ளுபடி, அதாவது அதிகபட்சம் ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.
மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது, “வரி செலுத்தும் மக்களுக்கு வசதியாக, மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏப்ரல் மாத சனி, ஞாயிறு நாட்களிலும் செயல்படும்” என தெரிவித்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி, குடிநீர், பாதாளச் சாக்கடை, தொழில், குப்பை வரி உள்ளிட்ட பல்வேறு மூலங்களிலிருந்து ஆண்டுக்கு பல கோடி வருவாயை பெறுகிறது. இருப்பினும், சொத்து வரியே மாநகராட்சியின் முதன்மை வருமானமாக உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.350 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்த வருவாயின் மூலம்:
அண்மையில், மாநகராட்சிகள் சொத்து வரியை 6% உயர்த்தியுள்ளன. புதிய நிதியாண்டில், மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.254.53 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…