மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை குறித்து திடுக்கிடும் பதில் அளித்தார்.
அதிமுகவில் சமீபத்தில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியின் திருமண நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
அதற்கு வருகை தந்த பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சிறப்பாக வரவேற்றனர்.
செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கேட்ட போது,
பழனிசாமி பதிலளித்ததாவது:
🗨️ “அவரைப் பற்றிக் கேட்க என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவர் அதிமுகவில் இல்லை.
அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எங்களுக்கு என்ன?
அதற்குப் பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை.”
🗨️ “ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்து சொல்லும் உரிமை உண்டு.
ஒருவரின் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது.
அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்;
அவரைப் பற்றி நான் கருத்து சொல்ல அவசியமில்லை.”
பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறினார்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…