மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை குறித்து திடுக்கிடும் பதில் அளித்தார்.
அதிமுகவில் சமீபத்தில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியின் திருமண நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
அதற்கு வருகை தந்த பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சிறப்பாக வரவேற்றனர்.
செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கேட்ட போது,
பழனிசாமி பதிலளித்ததாவது:
🗨️ “அவரைப் பற்றிக் கேட்க என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவர் அதிமுகவில் இல்லை.
அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எங்களுக்கு என்ன?
அதற்குப் பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை.”
🗨️ “ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்து சொல்லும் உரிமை உண்டு.
ஒருவரின் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது.
அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்;
அவரைப் பற்றி நான் கருத்து சொல்ல அவசியமில்லை.”
பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறினார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…