திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையும் சித்திரை மாதத்தையும் முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிலத்தில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் பொன்னேர் உழுதனர்.
குரோதி வருடம் முடிந்து, விசுவாசுவ வருடம் பிறந்ததை ஒட்டி நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் 7 கண்மாய்களுக்கு சார்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் முன்பு பூச்சூடிய தார்க்குச்சிகளை வைத்து வழிபாட்டை மேற்கொண்டு, அதனை கையில் ஏந்தியவாறு கிரிவலமாகச் சென்று, மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலங்களுக்குச் சென்றனர்.
அங்கு, 8 மாடுகள் பூட்டிய நான்கு ஏர் கலப்பைகளைக் கொண்டு, பாரம்பரிய பொன்னேர் உழுதல் முறையில் நிலத்தை உழுது, புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடிய விவசாயப் பணிகளை ஆரம்பித்தனர்.
பின்னர், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் வளாகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பானாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியன்குளம், தென்கால், சேமட்டான், குறுக்கிட்டான், சூறாவளிக்குளம் உள்ளிட்ட 7 கண்மாய்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பண்பாட்டு விழாவாகிய தமிழ் புத்தாண்டின் ஆழ்ந்த சமுதாயப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது.
சென்னையில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளரும் மதுரையின் முக்கிய அரசியல்…
மதுரையில் வேலையில்லா இளைஞர்கள் பேரணி பரபரப்பு மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள இயக்கத்தை ஆதரித்து படித்த…
தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து புதிய பரபரப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது…
தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும்…
சென்னை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக 23 பேர் இணையவுள்ளனர்”…
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள்…