திருப்பரங்குன்றம்: தமிழ் புத்தாண்டையும் சித்திரை மாதத்தையும் முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோயில் நிலத்தில், விவசாயிகள் பாரம்பரிய முறையில் பொன்னேர் உழுதனர்.
குரோதி வருடம் முடிந்து, விசுவாசுவ வருடம் பிறந்ததை ஒட்டி நேற்று திருப்பரங்குன்றம் பகுதியில் 7 கண்மாய்களுக்கு சார்ந்த விவசாயிகள் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் முன்பு பூச்சூடிய தார்க்குச்சிகளை வைத்து வழிபாட்டை மேற்கொண்டு, அதனை கையில் ஏந்தியவாறு கிரிவலமாகச் சென்று, மலைக்கு பின்புறம் உள்ள கோயில் நிலங்களுக்குச் சென்றனர்.
அங்கு, 8 மாடுகள் பூட்டிய நான்கு ஏர் கலப்பைகளைக் கொண்டு, பாரம்பரிய பொன்னேர் உழுதல் முறையில் நிலத்தை உழுது, புதிய அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கக்கூடிய விவசாயப் பணிகளை ஆரம்பித்தனர்.
பின்னர், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் வளாகத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் பானாங்குளம், செவ்வந்திகுளம், ஆரியன்குளம், தென்கால், சேமட்டான், குறுக்கிட்டான், சூறாவளிக்குளம் உள்ளிட்ட 7 கண்மாய்களின் விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு, விவசாய மரபுகளின் முக்கியத்துவத்தையும், தமிழர் பண்பாட்டு விழாவாகிய தமிழ் புத்தாண்டின் ஆழ்ந்த சமுதாயப் பிணைப்பையும் பிரதிபலிக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…