மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கட்கிழமை சிறப்பு வழிபாடுகள் விழாவாக நடைபெற்றன. அதிகாலை நடை திறக்கப்பட்டதும், சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த புனித நாளில், சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தி, மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனையும் நடத்தப்பட்டது. கோயில் இணை ஆணையர் ச. கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
புத்தாண்டு தரிசனத்துக்காக, அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகமான பக்தர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கோயில் ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு பக்தர்களை ஒழுங்குபடுத்தினர்.
மதுரை மாநகரத்திலுள்ள மற்ற முக்கிய கோயில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், முக்தீஸ்வரர் கோயில், கூடலழகர் பெருமாள் கோயில், நரசிங்கம் நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், மற்றும் இம்மையிலும் நன்மை தருவார் கோயில் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…