சமீபத்திய

தவெகவில் இணையுமா அழகிரி மகள் கயல்விழி?

தமிழக அரசியல் களம், சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய காலகட்டத்தில் தொடர்ந்து புதிய பரபரப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது திமுகவின் ‘கலைஞர் குடும்பத்தை’ மையமாகக் கொண்டு புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா இந்த அரசியல் பேச்சுகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. திமுகவின் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ளாத நிலையில், கயல்விழி விழாவில் நேரடியாக பங்கேற்றது அரசியல் கவனத்தை ஈர்த்தது. மேலும், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் ஒரு சரித்திர சாதனையாளர். அவரது கடின உழைப்பிற்குக் கிடைத்த வெற்றிதான் இது” என்று தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விளக்கங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மதுரையை மையமாகக் கொண்ட அழகிரி ஆதரவாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக திமுக தலைமையிடம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மு.க.அழகிரி நேரடி அரசியலில் தீவிரமாக செயல்படாத நிலையிலும், தென்மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் இன்னும் கணிசமான தாக்கத்தை வைத்துள்ளனர். இந்த சூழலில், கயல்விழி மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து அரசியல் நகர்வுகள் நடைபெறுகின்றன என்ற பேச்சும் எழுந்துள்ளது. அழகிரி ஆதரவாளர்களின் அடிப்படை வாக்கு வங்கி மற்றும் தவெகவுக்கு கிடைத்து வரும் இளைஞர், மகளிர் ஆதரவை இணைத்தால் மதுரையில் வலுவான அரசியல் கூட்டணி உருவாகலாம் என அரசியல் கணக்குகள் போடப்படுகின்றன.

மேலும், அண்மையில் அழகிரி ஆதரவாளர்களாக கருதப்படும் சிலர் அதிமுகவில் இணைந்ததும், மதுரையில் அரசியல் மறுசீரமைப்பு நடைபெறுகிறது என்ற கருத்தை வலுப்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் மூர்த்தியை தோற்கடித்த கார்த்திகேயனும் அழகிரி அணியுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படுவது இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுவரை கயல்விழி அல்லது மு.க.அழகிரி தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையிலும், இந்த அரசியல் நகர்வு திமுக மற்றும் தென்மாவட்ட அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அரசியல் சூழ்நிலை வேகமாக மாறிக்கொண்டிருக்கும் நிலையில், கயல்விழியின் அடுத்த கட்ட முடிவு தமிழக அரசியலில் புதிய சமன்பாட்டை உருவாக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

70 ஆயிரம் பேர் முதலீடு? தென்மாவட்டங்களில் பரபரப்பு

தென் மாவட்டங்களில் ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்தால் டாலர் மதிப்பில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி ஆயிரக்கணக்கான…

1 மணி நேரம் ago

செப்.1 முதல் கள்ளழகர் கோயிலில் செல்போன் தடை!

மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் வகையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல்…

1 நாள் ago

மதுரை மாணவர்களுக்கு மெகா கல்விக் கடன் முகாம்!

மதுரை மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு சுமார் ரூ.200 கோடி…

2 நாட்கள் ago

ஆகாஷ் மரணம்: சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 26 வயது ஆகாஷ் டெலிசன், கடந்த மார்ச் மாதம் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட…

3 நாட்கள் ago

ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு! யாருக்கெல்லாம்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்படி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை…

4 நாட்கள் ago

மத்திய அரசு வழக்கறிஞர் நியமனத்தில் புதிய விதிகள்!

மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட நீதித்துறை அமைப்புகளில்…

5 நாட்கள் ago