சமீபத்திய

போக்குவரத்துத் துறையின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 21-ஆம் தேதி 290 சிறப்புப் பேருந்துகளும், மே 22-ஆம் தேதி 595 பேருந்துகளும், மே 23-ஆம் தேதி 650 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப போக்குவரத்து வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

    மேலும், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்பதிவு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    விடுமுறை காலங்களில் பேருந்து நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிலையில், கூடுதல் பேருந்துகள் மூலம் பயணிகள் எளிதில் சொந்த ஊர்களை அடைய முடியும் என போக்குவரத்துக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thoonganagaram Admin

    Recent Posts

    விஜய் அமைச்சரவை பட்டியலில் மதுரை காணாமல் போனதா?

    சென்னை, தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், “முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் புதியதாக 23 பேர் இணையவுள்ளனர்”…

    2 நாட்கள் ago

    10ம் வகுப்பு முடிவுகள் இன்று வெளியீடு வாட்ஸ்அப் மூலம் தேர்வு முடிவை அறியும் வசதி

    தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியிருந்த நிலையில், இன்று பொதுத்தேர்வு முடிவுகள்…

    3 நாட்கள் ago

    அழகர் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் மே 22 முதல் தொடக்கம்

    மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அழகர் கோயில் பகுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவம் இந்த ஆண்டு மே 22ஆம்…

    4 நாட்கள் ago

    ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்

    மதுரையில் நடைபெற்ற கோயில் தரிசன நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிர்மல் குமார், மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்கும் திட்டம்…

    5 நாட்கள் ago

    அடிப்படை வசதி கேட்டு போராடும் சந்தோசம் நகர் மக்கள்

    மதுரை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட சந்தோசம் நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள், பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள்…

    6 நாட்கள் ago

    திருப்பரங்குன்றம் கோயிலில் நடைமுறை மாற்றம்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் வருகையை முன்னிட்டு வழக்கமான…

    7 நாட்கள் ago