சமீபத்திய

போக்குவரத்துத் துறையின் அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு அரசு, தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சிரமமின்றி யணம் செய்யும் வகையில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதிகரிக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மே 21-ஆம் தேதி 290 சிறப்புப் பேருந்துகளும், மே 22-ஆம் தேதி 595 பேருந்துகளும், மே 23-ஆம் தேதி 650 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கேற்ப போக்குவரத்து வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

    மேலும், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்பதிவு வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவும், தேவையற்ற அவசரத்தைத் தவிர்க்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    விடுமுறை காலங்களில் பேருந்து நிலையங்களில் அதிக நெரிசல் ஏற்படுவது வழக்கமான நிலையில், கூடுதல் பேருந்துகள் மூலம் பயணிகள் எளிதில் சொந்த ஊர்களை அடைய முடியும் என போக்குவரத்துக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thoonganagaram Admin

    Recent Posts

    மதுரைக்கு வெப்ப அதிர்ச்சி! உலகில் 7-வது இடம்

    பிரிட்டனின் University of Oxford மேற்கொண்ட உலகளாவிய நகர வெப்ப அபாய ஆய்வில், தமிழ்நாட்டின் மதுரை உலகின் தீவிர வெப்ப…

    23 மணி நேரங்கள் ago

    மதுரையில் 82 சுகாதாரத் துறை வேலைகள் அறிவிப்பு

    மதுரை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கம் மூலம் அரசு சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள…

    3 நாட்கள் ago

    நோயாளிகளுக்கு குட் நியூஸ்… OP பதிவு ஆன்லைனில்!

    அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளர் (OP) சேவையை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், தமிழ்நாடு அரசு ‘நலம்AI’ (NalamAI) என்ற வாட்ஸ்அப்…

    4 நாட்கள் ago

    ஜூலை 29ல் திறக்கும் அழகர்கோவில் 18ம் படி கருப்பசாமி கதவுகள்

    மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்மலையில் அமைந்துள்ள அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் முன்புறத்தில் உள்ள 18ம் படி கருப்பசாமி சன்னதி,…

    5 நாட்கள் ago

    90% பணிகள் முடிந்தது… திறப்பை நோக்கி மதுரை எய்ம்ஸ்

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் அருகே உள்ள கோ.புதுப்பட்டியில் 220 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,021.51 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு…

    6 நாட்கள் ago

    குழந்தை தத்தெடுப்பு பதிவுக்கு புதிய வழிகாட்டுதல் தமிழக அரசு

    தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் குழந்தை தத்தெடுப்பு ஒப்பந்தப் பதிவு தொடர்பாக பதிவுத்துறை புதிய சட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.…

    7 நாட்கள் ago