சமீபத்திய

பாகிஸ்தானும் சைனாவும் தீவிரவாதத்தின் முகம் – பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் ஆவேச கண்டனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில் மதுரை ஆதீனம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததும், 17 பேர் படுகாயமடைந்ததும் நாடெங்கிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியுள்ளது.

இந்தப் பயங்கரச் சம்பவம் குறித்து வீடியோவொன்றை வெளியிட்ட மதுரை ஆதீனம், தமது ஆவேசப்பூர்வமான பதிலில் கூறியதாவது:

“வன்மையாக கண்டிக்கத்தக்க சம்பவம் இது. ‘நீங்க யாரு’னு கேட்டுக்கேட்டே, சுற்றுலாப் பயணிகளை கொன்றிருக்காங்க. உலக நாடுகள் முழுவதும் இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐநா சபையிலிருந்து பாகிஸ்தானை உடனடியாக நீக்க வேண்டும். விளையாட்டு மட்டுமல்ல, எந்தவித உறவுகளும் பாகிஸ்தானுடன் இருக்கக்கூடாது.”

அதுமட்டுமின்றி, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கைகளை மதுரை ஆதீனம் பாராட்டினார்.

“இது 60 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் விவகாரம். நம் பிரதமர் வந்துதான் இதை முறையாக சரிசெய்து வருகிறார். ஆனால் இதற்கெல்லாம் மூலக்காரணம் சைனாக்காரன் தான். ஆயுதங்களை வழங்குவது சீனாவே. கம்யூனிஸ்ட் நாடான சீனா, யாரும் இருக்கக்கூடாது என படைகள் அனுப்புகிறது.”

அதீனம் மேலும் கூறியதாவது:

“சைனாவும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியான எதிரிகளைப் போலவே செயல்படுகின்றன. இந்த இரு நாடுகளின் செயல்களை உலக நாடுகள் கண்டித்து, முழுமையாக முறையிட வேண்டும்.”

இந்த தாக்குதலுக்கு எதிராக மதுரை ஆதீனத்தின் இந்த ஆவேசமான பதிலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago