மதுரை, சித்திரைத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாநகராட்சி மேற்கொள்ளும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்,
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை உள்ளதாகவும், அந்த தொகை செலுத்தப்படவில்லை என்றால் திருவிழா ஏற்பாடுகளை செய்ய முடியாது என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். இது பற்றிய தகவல் அமைச்சருக்கு உள்ளதா?”
என்று கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:
“சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி மற்றும் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்க மாநகராட்சி ஆணையருக்கு தக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பணம் ஒரு தடையல்ல. விழா முழுமையாக மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் நடத்தப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய குறிப்புகள்:
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…