கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ரா எடுத்துச்செல்லும் இந்த திட்டம், கல்வி, விளையாட்டு, சுயமுன்னேற்றம் ஆகிய துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா-பாட்டி அல்லது சிங்கிள் பெற்றோர் அரவணைப்பில் இருக்கின்றனர். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபின், குழந்தைகள் வீடுகளில் தனியாக இருப்பது, தவறான பழக்க வழக்கங்களுக்கோ, பாதைகளுக்கோ இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
“தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவை கிடைப்பதில்லை. இதை மாற்ற இந்த முயற்சி. மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் இந்த விடுமுறையை கழிக்கவேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.”
இந்த முயற்சி மாணவர்களின் நலனுக்காக நகராட்சி மேற்கொள்ளும் ஒரு முன்னோடியான நடவடிக்கை என பெரிதும் பாராட்டப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…