கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ரா எடுத்துச்செல்லும் இந்த திட்டம், கல்வி, விளையாட்டு, சுயமுன்னேற்றம் ஆகிய துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா-பாட்டி அல்லது சிங்கிள் பெற்றோர் அரவணைப்பில் இருக்கின்றனர். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபின், குழந்தைகள் வீடுகளில் தனியாக இருப்பது, தவறான பழக்க வழக்கங்களுக்கோ, பாதைகளுக்கோ இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
“தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவை கிடைப்பதில்லை. இதை மாற்ற இந்த முயற்சி. மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் இந்த விடுமுறையை கழிக்கவேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.”
இந்த முயற்சி மாணவர்களின் நலனுக்காக நகராட்சி மேற்கொள்ளும் ஒரு முன்னோடியான நடவடிக்கை என பெரிதும் பாராட்டப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…