கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாகவும், பாதுகாப்பாகவும் கழிக்க, மதுரை மாநகராட்சி கல்வி துறை சார்பில் செஸ், கேரம், யோகா, ஓவியம், தையல், பசுமை நடைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் சித்ரா எடுத்துச்செல்லும் இந்த திட்டம், கல்வி, விளையாட்டு, சுயமுன்னேற்றம் ஆகிய துறைகளில் மாணவர்களை ஊக்குவிக்கக் கூடியதாக அமையும்.
மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சிலர் பெற்றோர் இல்லாத நிலையில் தாத்தா-பாட்டி அல்லது சிங்கிள் பெற்றோர் அரவணைப்பில் இருக்கின்றனர். பெற்றோர்கள் வேலைக்குச் சென்றபின், குழந்தைகள் வீடுகளில் தனியாக இருப்பது, தவறான பழக்க வழக்கங்களுக்கோ, பாதைகளுக்கோ இட்டுச் செல்லும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
“தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர் கண்காணிப்பு மற்றும் பயிற்சிகள் இருக்கின்றன. ஆனால் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அவை கிடைப்பதில்லை. இதை மாற்ற இந்த முயற்சி. மாணவர்கள் பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் இந்த விடுமுறையை கழிக்கவேண்டும் என்பதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.”
இந்த முயற்சி மாணவர்களின் நலனுக்காக நகராட்சி மேற்கொள்ளும் ஒரு முன்னோடியான நடவடிக்கை என பெரிதும் பாராட்டப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…