மதுரையில் வேலையில்லா இளைஞர்கள் பேரணி பரபரப்பு
மதுரையில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ என்ற சமூக வலைதள இயக்கத்தை ஆதரித்து படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு கோரி பேரணி நடத்திய சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்த அந்த இயக்கத்தின் பக்கங்கள் மத்திய அரசால் முடக்கப்பட்ட நிலையில், இன்று மதுரை காந்தி மியூசியத்திலிருந்து தமுக்கம் வரை இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர். “வேலை வேண்டும், வாழ்வு வேண்டும், மரியாதை வேண்டும்” என்ற கோஷங்களுடன் நடைபெற்ற இந்த பேரணியில் வேலையின்மை, சமூக அவமதிப்பு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து கடும் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
முக்கிய அம்சங்கள்
மதுரை காந்தி மியூசியம், தமுக்கம், வேலைவாய்ப்பு கோரி பேரணி, ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ ஆதரவாளர்கள்
வேலையின்மை பிரச்சனை மீண்டும் தேசிய விவாதமாக மாறியது, சமூக வலைதள தடை குறித்து எதிர்ப்பு கிளம்பியது, இளைஞர்கள் ஒன்றிணையும் நிலை உருவானது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்தின் கருத்து எதிர்ப்பை தூண்டியது, மத்திய அரசின் நடவடிக்கை ஜனநாயக விரோதம் என குற்றச்சாட்டு எழுந்தது, பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன
இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்ட பக்கம் குறுகிய காலத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை பெற்றது, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பக்கத்தை பின்தொடர்ந்தனர், பாதுகாப்பு காரணம் கூறி சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன
பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள், “20 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானோர் வேலையின்றி தவிக்கின்றனர்; அரசு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர். கடந்த வாரம் உச்சநீதிமன்ற விசாரணையின் போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் சில இளைஞர்களை “கரப்பான்பூச்சி” என ஒப்பிட்டு பேசியதாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்த்து உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘Cockroach Janta Party’ பக்கம் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமானது.
மகாராஷ்டிராவை சேர்ந்த அபிஜித் திப்கே என்ற மாணவர் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் நிலையில் இந்த சமூக வலைதள முயற்சியை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலைவாய்ப்பு, பொருளாதார சிக்கல் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நாடு முழுவதும் விவாதம் உருவாகியுள்ள சூழலில், மதுரையில் நடைபெற்ற இந்த பேரணி மேலும் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வேலையின்மை பிரச்சனையை அரசுகள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
