தமிழகத்தில் உள்ள அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில், மாணவர்களை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. இவ்வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் மதிப்பீடு செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் சான்றிதழ் வழங்கும் பரிசோதனைகள் நடத்தப்படுவது வழமை.
இந்த ஆண்டுக்கான ஆய்வுகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றன. இதில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா நேரில் பங்கேற்று, வாகனங்களின் நிலை, தேவையான வசதிகள், மற்றும் பாதுகாப்பு முறைமைகள் குறித்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.
கல்வியாண்டு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பயன்படுத்தவுள்ள வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு பள்ளி வாகன சிறப்பு விதி அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் போக்குவரத்துத்துறை, காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் வைகாசி வசந்த திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு விழா மே 31-ம்…
மதுரை ரயில்வே நிலையம் விரைவாக மறுசீரமைப்பு பணிகள் மூலம் முழுமையாக மேம்படுத்தப்படுகின்றது. அதன் ஒரு முக்கிய பகுதியாக, புதிய பல…
நிகழ்வுகள் சுருக்கம்: 2012: மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியில், போலீசாரை தாக்கி, அவர்களது வாகனங்களை சேதப்படுத்தியதாக எட்டு பேர்மீது வழக்குப் பதிவு…
மதுரை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.…
மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிக்கொணரும் முக்கியமான ஆதாரங்கள் வெளியாகின. இந்த ஆய்வின்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம், 330 தொழில்நுட்ப பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்கு தயாராகிக்…