மதுரை கோரிப்பாளையம் மேம்பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பணிகள் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
அமைச்சர் எ.வ. வேலு, கோரிப்பாளையம் மேம்பாலத் தூண்களுக்கு பயன்படுத்தப்பட்ட கான்கிரீட் தளத்தின் தாங்குதிறனை சிறப்பு இயந்திரங்கள் மூலம் பரிசோதனை செய்தார். பணிகள் தரநிலைக்கு ஏற்ப நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்வதற்காக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
“திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தென்மாவட்டங்களுக்கு மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மதுரை நகரின் நூற்றாண்டுகால கோரிக்கை ஆகிய கோரிப்பாளையம் மேம்பாலம் தற்போது 97% முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகள் டிசம்பர் 1-ம் தேதிக்குள் நிறைவு பெறும்.
மேம்பாலம் டிசம்பர் 7-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படும்.”
கோரிப்பாளையம் மேம்பாலத்திற்கான நில ஆர்ஜிதப் பணிகளில் ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியதால், சுமார் ஆறு மாத தாமதம் ஏற்பட்டது. இருந்தபோதிலும், பிற கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
மேம்பாலம் திறக்கப்பட்ட பின், மதுரையில் அதிகரிக்கும் வாகன நெரிசலை கருத்தில் கொண்டு:
இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் வாரந்தோறும் கண்காணித்து வருகிறார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
“திராவிட மாடல் ஆட்சியிலிருந்து, பாலங்களின் பராமரிப்பு மற்றும் தரச் சான்றிதழுக்கென தனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பிரிவு வழங்கும் தரச்சான்றிதழ் (Quality Certificate) பெற்ற பின்னரே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலங்கள் திறக்கப்படுகின்றன.
அமெரிக்க தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், வளைவு மற்றும் திருப்பங்களில் விபத்துகளை குறைக்கும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்படுகின்றன.”
மதுரையின் தெற்குவாசல் முதல் வில்லாபுரம் வரை உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவாக்கும் பணிக்கான சாத்தியக்கூறு அறிக்கை (Feasibility Report) விரைவில் தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…