தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாட்டின் போது கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்,”
என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், “அதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ கூட்டணி அறிவிப்பு வெளிவரும்” என கூறியதால், அரசியல் வட்டாரத்தில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போது பிரதிநிதித்துவம் செய்கிற மதுரை மத்திய தொகுதியில், தேமுதிக தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவரது தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில்,
“பிரேமலதா விஜயகாந்த் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேண்டும்”
என்கிற தீர்மானம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மதுரை மாவட்ட அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தேமுதிக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி செய்யலாம் என்ற திறந்த மனநிலையுடன் இருக்கிறது.
ஜனவரி மாநாட்டில் அனைத்துத் தீர்மானங்களும் வெளியாகும்.
மக்கள் விருப்பம் மற்றும் கட்சி தொண்டர்களின் கோரிக்கையை மதித்து முடிவெடுக்கப்படும்.”
மதுரை மத்திய தொகுதி போட்டி,
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…