தமிழக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திமுகவின் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக இன்னும் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,
“ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாட்டின் போது கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும்,”
என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், “அதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ கூட்டணி அறிவிப்பு வெளிவரும்” என கூறியதால், அரசியல் வட்டாரத்தில் சஸ்பென்ஸ் நிலவுகிறது.
திமுக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தற்போது பிரதிநிதித்துவம் செய்கிற மதுரை மத்திய தொகுதியில், தேமுதிக தொண்டர்கள் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
அவரது தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில்,
“பிரேமலதா விஜயகாந்த் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட வேண்டும்”
என்கிற தீர்மானம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த முடிவு, மதுரை மாவட்ட அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தேமுதிக, எந்தக் கட்சியுடனும் கூட்டணி செய்யலாம் என்ற திறந்த மனநிலையுடன் இருக்கிறது.
ஜனவரி மாநாட்டில் அனைத்துத் தீர்மானங்களும் வெளியாகும்.
மக்கள் விருப்பம் மற்றும் கட்சி தொண்டர்களின் கோரிக்கையை மதித்து முடிவெடுக்கப்படும்.”
மதுரை மத்திய தொகுதி போட்டி,
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…