மதுரை மாவட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலக்காகக் கொண்டு, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் ஜனவரி 14 மற்றும் 17 ஆகிய இரு நாட்களில் பொங்கல் சுற்றுலா விழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பாரம்பரிய பொங்கல் கொண்டாட்டத்தை நேரடியாக அனுபவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனவரி 14-ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்திலிருந்து தனி சிறப்பு பேருந்து மூலம் சுற்றுலா பயணிகள் மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம் அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு,
ஆகியவை நடைபெறுகின்றன. இதனுடன், பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், தமிழக பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியனவும் இடம்பெறுகின்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜனவரி 17-ம் தேதி காலை 10 மணியளவில், மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து அரசு தனி சிறப்பு பேருந்து மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அங்கு, நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பாதுகாப்புடன் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரு நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்,
ஆகிய விவரங்களுடன் எண் 1, மேலவெளி வீதி, மதுரை மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தொடர்பு எண்கள்:
0452-2334757
9176995868
மின்னஞ்சல்:
touristofficemadurai@gmail.com
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…