மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நெல்பேட்டை, உத்தங்குடி, கல்மேடு, அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சில இறைச்சிக் கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள், கழிவுகளை எந்தவித கட்டுப்பாடுமின்றி வைகை ஆற்றில் நேரடியாக வெளியேற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் செயல்கள், துர்நாற்றம், கிருமித்தொற்று அபாயம், மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் இதேபோன்ற சம்பவம் நடந்தபோது, இறைச்சிக் கடைகளுக்கு தலா ₹50,000 அபராதம் விதிக்கப்பட்டது. இருப்பினும், மாநகராட்சி நடவடிக்கைகள் போதிய கண்காணிப்பு இல்லாமையால், இந்த மாசுபாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
சமீபத்தில், மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், வைகை ஆற்றில் மொத்தம் 177 இடங்களில் கழிவுகள் வெளியேற்றப்படுவது கண்டறியப்பட்டது. அதில் 41 இடங்கள் மாநகராட்சி எல்லைக்குள் இருப்பது மிகுந்த கவலைக்குரிய விடயம் என கூறப்படுகிறது.
இன்று மீண்டும் வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இது, நீர்வாழ் உயிரினங்களுக்கும், பொதுநலத்துக்கும் நேரடியாக தீங்கு விளைவிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…