மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்வினை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, தன் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
“ஒருவர் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பார்; மற்றவர் இமானுவேல் சேகரன் பெயர் வேண்டும் என்பார். ஆனால் எங்கள் நிலைப்பாடு தெளிவு – எந்த தாத்தா பெயரும் வேண்டாம்!” என்று சீமான் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று அடிப்படையிலான ஒரு தீர்வை அவர் முன்வைத்தார்:
“மதுரை எனும் பெயருக்கே பின்னணியாக உள்ள வரலாற்று பெருமையை எடுத்துக் காட்டும் வகையில், தலையாலங்கானத்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயர் வைக்க வேண்டும். கண்ணகி சிலம்பை உடைத்தபோது, நீதியை நிலைநாட்டிய மன்னன் நெடுஞ்செழியனே. அந்த பெயரை யாரும் எதிர்க்க முடியாது,” என்றார்.
சீமான் மேலும் எச்சரிக்கை வகையில் கூறியதாவது:
“இந்தப் பெயர் வைக்கப்படாவிட்டால் நாங்கள் முற்றுகையிடுவோம்; எனது ஆட்சி வந்தால் மதுரை விமான நிலையத்திற்கு நிச்சயமாக நெடுஞ்செழியன் பெயரையே வைப்பேன்.“
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…