மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்வினை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, தன் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
“ஒருவர் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பார்; மற்றவர் இமானுவேல் சேகரன் பெயர் வேண்டும் என்பார். ஆனால் எங்கள் நிலைப்பாடு தெளிவு – எந்த தாத்தா பெயரும் வேண்டாம்!” என்று சீமான் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று அடிப்படையிலான ஒரு தீர்வை அவர் முன்வைத்தார்:
“மதுரை எனும் பெயருக்கே பின்னணியாக உள்ள வரலாற்று பெருமையை எடுத்துக் காட்டும் வகையில், தலையாலங்கானத்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயர் வைக்க வேண்டும். கண்ணகி சிலம்பை உடைத்தபோது, நீதியை நிலைநாட்டிய மன்னன் நெடுஞ்செழியனே. அந்த பெயரை யாரும் எதிர்க்க முடியாது,” என்றார்.
சீமான் மேலும் எச்சரிக்கை வகையில் கூறியதாவது:
“இந்தப் பெயர் வைக்கப்படாவிட்டால் நாங்கள் முற்றுகையிடுவோம்; எனது ஆட்சி வந்தால் மதுரை விமான நிலையத்திற்கு நிச்சயமாக நெடுஞ்செழியன் பெயரையே வைப்பேன்.“
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…