மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ள நிலையில், இதற்கு பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்வினை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து, தன் கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
“ஒருவர் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்பார்; மற்றவர் இமானுவேல் சேகரன் பெயர் வேண்டும் என்பார். ஆனால் எங்கள் நிலைப்பாடு தெளிவு – எந்த தாத்தா பெயரும் வேண்டாம்!” என்று சீமான் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று அடிப்படையிலான ஒரு தீர்வை அவர் முன்வைத்தார்:
“மதுரை எனும் பெயருக்கே பின்னணியாக உள்ள வரலாற்று பெருமையை எடுத்துக் காட்டும் வகையில், தலையாலங்கானத்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயர் வைக்க வேண்டும். கண்ணகி சிலம்பை உடைத்தபோது, நீதியை நிலைநாட்டிய மன்னன் நெடுஞ்செழியனே. அந்த பெயரை யாரும் எதிர்க்க முடியாது,” என்றார்.
சீமான் மேலும் எச்சரிக்கை வகையில் கூறியதாவது:
“இந்தப் பெயர் வைக்கப்படாவிட்டால் நாங்கள் முற்றுகையிடுவோம்; எனது ஆட்சி வந்தால் மதுரை விமான நிலையத்திற்கு நிச்சயமாக நெடுஞ்செழியன் பெயரையே வைப்பேன்.“
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…