மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம்–1, வார்டு எண் 8-க்கு உட்பட்ட அல்-அமீன் நகர் பிரதான சாலை – அழகர்கோவில் மெயின் ரோடு இணைப்பாக புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான பூமி பூஜை இன்று (14.12.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தார்.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும் புதிய தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், குடிநீர் திட்டப் பணிகள், மழைநீர் வடிகால் அமைப்புகள், பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வார்டு எண் 8-ல் உள்ள அல்-அமீன் நகர் பகுதியில் பொதுமக்கள் போக்குவரத்து சிரமமின்றி எளிதாக பயணிக்க வசதியாக இந்த புதிய இணைப்பு பாலம் திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இந்த பாலம் கட்டப்படவுள்ள நிலையில், பூமி பூஜை நடைபெற்று கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் உதவி ஆணையாளர் ரவிக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முருகன், மாமன்ற உறுப்பினர்கள் ராதிகா கௌரிசங்கர், முத்துக்குமாரி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…