சமீபத்திய

அழகர்கோயிலில் இருந்து சோலைமலைக்கு புதிய பேருந்து சேவை பக்தர்களுக்கு புதிய வசதி

மதுரை அழகர்கோயிலில் இருந்து சோலைமலை முருகன் கோயிலும், ராக்காயி அம்மன் கோயிலும் செல்ல பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நான்கு புதிய பேருந்துகள் கோயில் நிர்வாகத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்துகளை மதுரை மாவட்டத்தில் நேற்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:
“தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ், அழகர்கோயில் பக்தர்களுக்காக இந்த நான்கு பேருந்துகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல பயணிக்க ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.”

மேலும், வரும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்த முறையில் பணியாற்றி வருகின்றன. கடந்த வருடங்களில் நிகழ்ந்த சிறிய சிக்கல்களை தவிர்க்கும் வகையில், இந்த ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காவல்துறை, வருவாய்த் துறை, மாநகராட்சி, அறநிலையத்துறை மற்றும் சுகாதாரத் துறைகள் இணைந்து கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த புதிய பேருந்து சேவை, பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

22 மணி நேரங்கள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago