சமீபத்திய

விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் கூறிய புதிய தகவல்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் இன்று பூமி பூஜையுடன் துவங்கின.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் தகுதி பெற்றுள்ள, ஆனால் விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

மேலும், மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விளையாட்டு வீரர்களுக்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்படுவதால், இளைஞர்களின் திறமை வளர்ச்சிக்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நகராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago