தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய முதல் மாநில மாநாட்டைத் தொடர்ந்து, இப்போது இரண்டாவது மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு, மதுரை மாவட்ட காவல்துறை, மாநாடு தொடங்கும் மற்றும் முடியும் நேரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விவரங்களை கேட்டு கட்சியிடம் விளக்கம் கோரியுள்ளது.
மாநாட்டுக்கான அனுமதியை கோரி தவெக சார்பில், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநாட்டுக்கான இடம், மேடையின் அளவு, அந்த இடத்தின் உரிமையாளரின் பெயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை போலீசார் எழுப்பியுள்ளனர். மேலும், மாநாட்டில் பங்கேற்க உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பிரித்து எண்ணிக்கையையும் தெரிவிக்க கேட்டுள்ளனர்.
தவெக கட்சியின் முதலாவது மாநில மாநாடு, 2024 அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அப்போது கூட, காவல்துறையினர் இதுபோன்ற கேள்விகளை முன்வைத்து, உரிய தகவல்களை பெற்றிருந்தனர். தற்போது மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டிலும் அதே போல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், மாநில அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மாநாடு நடைபெறும் இடத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்க, போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யும் நோக்கத்திலேயே இவ்வகை விவரங்களை காவல்துறை கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் விரைவில் முழுமையான பதில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடையது:
மாநாட்டுக்கான அறிவிப்பு தவெக தலைவர் விஜய் மூலம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்வரும் தேர்தலுக்கான முன்தயாரிப்புகளுக்குமான அடிப்படை தளமாகவே இந்த மாநாடு அமைந்திருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…