சமீபத்திய

கரிசல்குளம் அரசு சுகாதார நிலையத்தில் புதிய கட்டிட பூமி பூஜை செல்லூர் ராஜு கருத்துகள்

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார்.


செல்லூர் ராஜு பேட்டி முக்கிய அம்சங்கள்:

  • பொள்ளாச்சி வழக்கு குறித்து:
    “அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த சம்பவங்களுக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறையாக நடவடிக்கை எடுத்து சிபிஐ-க்கு உத்தரவிட்டார். சிபிஐ-க்கு உத்தரவிட்டு ‘யார் அந்த சார்’ என்பதை எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்து தண்டனை வழங்கியுள்ளோம். ஆனால் திமுக அரசு எந்த ஒரு சம்பவத்திற்கும் உத்தரவிடாது. திமுக தான் ‘யார் அந்த சார்’ என்பதை மறுக்கிறது.”
  • திமுக கூட்டணி நிலை பற்றி:
    “திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று யார் சொல்கிறார்கள்? நாங்கள் சொல்லவில்லை. ஏன் வலுவாக உள்ளது என்று சொல்கிறார்கள்? முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு செல்வாக்கு உள்ளது. கூட்டணி STRONG ஆக உள்ளது என்பதை ஏன் சொல்லவேண்டும்? அவங்களுக்கு பயம் இருப்பதால் தான் அப்படி சொல்கிறார்கள். மக்களே எஜமானர்கள்.”
  • அதிமுக-பாஜக கூட்டணி பற்றிய கருத்து:
    “அதிமுக தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று அமித்ஷா, நயினார் நாகேந்திரன் கூறியுள்ளனர்.”
  • தவெக தலைவர் விஜய் அதிமுக கூட்டணியில் சேராமை குறித்து:
    “மக்களோடு கூட்டணி தான் நாங்கள் வைத்துள்ளோம். தேர்தல் நெருங்கும் போது தான் இதைத் தெரிவிப்போம்.”
Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago