தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக புதிய அரசியல் கட்சி தவெக தலைவர் விஜய், மதுரையில் நடைபெற்ற தலைமை மாநாட்டில் ஆவேசமான உரையாற்றினார். மாநில அரசியலின் எதிர்காலத்தை மாற்றப்போகும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தன் முடிவுகளை வெளிப்படையாக அறிவித்தார்.
“பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி. இந்த தேர்தலில் போட்டி எங்களுக்கும் திமுகவுக்கும் தான். பாஜகவின் எண்ணங்கள் தமிழகத்தில் எடுபடாது,” எனக் கூறி, மத்திய அரசின் நயவஞ்சக அணுகுமுறைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
“பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லதா? இல்லையா இஸ்லாமிய மக்களுக்கு சதியா? அடிமை கூட்டணியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன்” எனப் பதறவைக்கும் வகையில் பேசிய அவர், தனிக் கட்சி எனும் தன்மையுடன் தன்னிச்சையான அரசியலை முன்னெடுப்பதை உறுதிப்படுத்தினார்.
“நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடிச்சு வர்றீங்க. என் மக்களை நான் எப்படி மறப்பேன்?” என்ற அவரது உரை, கூட்டத்தில் கண்கள் கலங்கச் செய்தது. அவரது நன்றிக்கடனை அரசியலாக மாற்ற முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
விழா மேடையில் மிகுந்த பரபரப்புக்கு இடையே, 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்தார். அதனுடன், “மதுரை கிழக்கு விஜய், மதுரை தெற்கு விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய்… 234 தொகுதிகளிலும் நம்ம கட்சி போட்டியிடும். எல்லா இடங்களிலும் ‘நான்’ தான் வேட்பாளர்!” என அவர் கூறியதோடு, ரசிகர்களின் கரகோஷம் முழங்கியது.
விஜயின் உரை, தமிழ் அரசியலுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாகவும், பாரம்பரிய கட்சிகளுக்கிடையே புதிய சக்தியாக தவெக எழுவதாகவும் புரியவைத்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படப்போகும் என அரசியல் நிபுணர்கள் கணிக்கத் தொடங்கியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…