மதுரை மாவட்டம் மேலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில் தட்டச்சுப் பயிற்சிக்கு கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவிகள் விடுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கே. ஜே. பிரவீன்குமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவிகளுக்கான சமூகநீதி விடுதியில், புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தட்டச்சுப் பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கப்பட்டது.
அப்போது பேசிய ஆட்சியர் பிரவீன்குமார் கூறியதாவது:
“மாணவிகள் கடந்த வாரம் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த விடுதியில் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சுப் பயிற்சி பெற தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டன. கல்லூரியில் இருக்கும் காலத்திலேயே தட்டச்சுப் பயிற்சி பெறுவது சிறப்பானது.
தங்கியிருக்கும் இடத்திலேயே இந்தப் பயிற்சி கிடைப்பது அனைவருக்கும் சாதாரண வாய்ப்பு அல்ல. எனவே, இந்த வாய்ப்பை மாணவிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
மேலும் அவர் தெரிவித்தது:
“மேலூர் விடுதியில் கிடைக்கும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து சமூகநீதி பெண்கள் விடுதிகளிலும் தட்டச்சுப் பயிற்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.”
இந்த நிகழ்வில்,
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…