சமீபத்திய

த.வெ.க. மதுரை மாபெரும் மாநாடு – விஜய் ரெடி! மக்கள் ரெடியா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மிகுந்த பிரம்மாண்டத்துடன் நடத்த தயாராகி வருகிறது. இம்மாநாடு, வரும் 21-ம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.

தேதி மாற்றம் – விநாயகர் சதுர்த்தி காரணம்

ஆரம்பத்தில் மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், அதனைத் தவிர்த்து 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநாட்டிற்கான பாதுகாப்பு, ஏற்பாடுகள்

த.வெ.க. தலைவர் விஜய், “முன்னதாக யாரும் காணாத அளவுக்கு” இந்த மாநாடு நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 16-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நிகர்ச்சி நடைபெற்றது. அதே நாளில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து பாதுகாப்பு அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டது.


506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு – 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 506 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இப்பரப்பளவில் நிலம் செம்மைப்படுத்தும் பணிகள் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யின்றனர், அவர்களுக்கான தற்காலிக தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


மேடைகள், வசதிகள், பாதுகாப்பு – அனைத்தும் அதிநவீனம்

  • விஜய் நடக்கும் “Rampwalk” மேடை, பாதுகாப்பு தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • வருகையாளர்களுக்காக குடிநீர் தொட்டிகள், சிசிடிவி கேமராக்கள், மருத்துவ முகாம், கழிப்பறைகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • 200 ஏக்கர் நிலம் தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்பாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

கொடிகம்பமும், கொடி ஏற்றும் விழாவும்

மாநாடு நடைபெறும் திடலில் பிரம்மாண்டமான கொடிகம்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநாடன்று த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சிக் கொடியினை ஏற்றி வைப்பார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.


குறிப்பு: த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், அவ்வப்போது நேரில் வந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Thoonganagaram Admin

Recent Posts

மாசி வீதிகள் முழுவதும் பக்தர்கள் – கைலாச காட்சியில் திருவிழா களைகட்டியத்து

மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…

14 மணி நேரங்கள் ago

சித்திரை விழா இரண்டாம் நாள் வெகு சிறப்பு

சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…

2 நாட்கள் ago

கொடியேற்றம், சிம்ஹாசனம், வாகன சேவை–முதல் நாள் கோலாகலம்

மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…

2 நாட்கள் ago

மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…

5 நாட்கள் ago

Track Meenakshi Amman – மதுரை சித்திரை திருவிழா 2026 | மீனாட்சி அம்மன் & சுந்தரேஸ்வரர் வீதி உலா Live Tracking

நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…

5 நாட்கள் ago

Track Alagar | மதுரை சித்திரை திருவிழா 2026 – கள்ளழகர் இருக்கும் இடம் Live Tracking

நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…

5 நாட்கள் ago