தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மிகுந்த பிரம்மாண்டத்துடன் நடத்த தயாராகி வருகிறது. இம்மாநாடு, வரும் 21-ம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.
ஆரம்பத்தில் மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், அதனைத் தவிர்த்து 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க. தலைவர் விஜய், “முன்னதாக யாரும் காணாத அளவுக்கு” இந்த மாநாடு நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 16-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நிகர்ச்சி நடைபெற்றது. அதே நாளில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து பாதுகாப்பு அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டது.
மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 506 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இப்பரப்பளவில் நிலம் செம்மைப்படுத்தும் பணிகள் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யின்றனர், அவர்களுக்கான தற்காலிக தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
மாநாடு நடைபெறும் திடலில் பிரம்மாண்டமான கொடிகம்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநாடன்று த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சிக் கொடியினை ஏற்றி வைப்பார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறிப்பு: த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், அவ்வப்போது நேரில் வந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…