சமீபத்திய

த.வெ.க. மதுரை மாபெரும் மாநாடு – விஜய் ரெடி! மக்கள் ரெடியா?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தனது இரண்டாவது மாநில மாநாட்டை மிகுந்த பிரம்மாண்டத்துடன் நடத்த தயாராகி வருகிறது. இம்மாநாடு, வரும் 21-ம் தேதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது.

தேதி மாற்றம் – விநாயகர் சதுர்த்தி காரணம்

ஆரம்பத்தில் மாநாடு ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் விநாயகர் சதுர்த்தி விழா இருப்பதால், அதனைத் தவிர்த்து 21-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநாட்டிற்கான பாதுகாப்பு, ஏற்பாடுகள்

த.வெ.க. தலைவர் விஜய், “முன்னதாக யாரும் காணாத அளவுக்கு” இந்த மாநாடு நடைபெற வேண்டும் என ஆலோசனைகள் வழங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 16-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நிகர்ச்சி நடைபெற்றது. அதே நாளில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தை சந்தித்து பாதுகாப்பு அனுமதி கோரி மனுவும் அளிக்கப்பட்டது.


506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு – 20 லட்சம் பேர் எதிர்பார்ப்பு

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 20 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 506 ஏக்கர் நிலம் மாநாட்டிற்காக வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இப்பரப்பளவில் நிலம் செம்மைப்படுத்தும் பணிகள் 20-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலமாக நடைபெற்று வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யின்றனர், அவர்களுக்கான தற்காலிக தங்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.


மேடைகள், வசதிகள், பாதுகாப்பு – அனைத்தும் அதிநவீனம்

  • விஜய் நடக்கும் “Rampwalk” மேடை, பாதுகாப்பு தடுப்பு வேலிகள், ஒலி ஒளி கருவிகள் பொருத்துவதற்கான கேலரிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • வருகையாளர்களுக்காக குடிநீர் தொட்டிகள், சிசிடிவி கேமராக்கள், மருத்துவ முகாம், கழிப்பறைகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  • 200 ஏக்கர் நிலம் தனியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பங்கேற்பாளர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதியாக உருவாக்கப்பட்டு வருகிறது.

கொடிகம்பமும், கொடி ஏற்றும் விழாவும்

மாநாடு நடைபெறும் திடலில் பிரம்மாண்டமான கொடிகம்பம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநாடன்று த.வெ.க. தலைவர் விஜய் தனது கட்சிக் கொடியினை ஏற்றி வைப்பார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.


குறிப்பு: த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த், அவ்வப்போது நேரில் வந்து அனைத்து பணிகளையும் தொடர்ந்து கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

Thoonganagaram Admin

Recent Posts

லஞ்சம் கேட்டால் புகார் செய்யுங்கள் அமைச்சர் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…

2 நாட்கள் ago

மதுரைக்கு குடிநீர் நெருக்கடி அபாயம் முல்லைப் பெரியாறில் குறைந்த நீர்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…

3 நாட்கள் ago

மதுரை பாலிடெக்னிக்கில் 2026–27 சேர்க்கை தொடங்கியது

மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…

4 நாட்கள் ago

பல ஆண்டுகளாக பாழடைந்த குடியிருப்புகள்… அதிகாரிகள் அலட்சியமா?

மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…

4 நாட்கள் ago

மதுரையில் நாளை மின்தடை வெளியான முழு பட்டியல்

மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…

5 நாட்கள் ago

மதுரை–சென்னை டிக்கெட் ரூ.17 ஆயிரம் தாண்டியது

கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…

6 நாட்கள் ago