சமீபத்திய

கீழடி அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு – தமிழர் பெருமையை ஏற்க மனமில்லையா?

மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வில் தமிழர்களின் பண்பாட்டுத் தொன்மையை வெளிக்கொணரும் முக்கியமான ஆதாரங்கள் வெளியாகின. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை மத்திய தொல்லியல்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளது.

இதை எதிர்த்து திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அணுகுமுறை, தமிழர்களின் தொன்மையும் பெருமையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் இல்லை என்பதை காட்டுகிறது என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். “இந்தியாவின் பழங்கால வரலாற்றை உணர்த்தும் இந்த அறிக்கையை ஏற்காதது, அரசியல் நோக்கத்துடன் நிறைந்தது,” என்றும் அவர் கூறினார்.

மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன், “தமிழர் வரலாற்றுக்கும் கீழடி உண்மைக்கும் எதிரியாக பாஜக செயல்படுகிறது,” எனக் குற்றம்சாட்டினார்.

இதை மறுத்து பதிலளித்த பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன், “கீழடியில் அகழ்வாய்விற்கு நிதி ஒதுக்கியதும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பார்வையிட்டதும் மத்திய அரசே. சு.வெங்கடேசன் இதனை அரசியல் கருவியாக பயன்படுத்தக்கூடாது,” என தெரிவித்தார்.

இந்த விவகாரம், தமிழர் பண்பாட்டு அடையாளங்களை ஏற்றுக்கொள்ளும் தயார்பாட்டில் மத்திய அரசு எவ்வளவு உண்மையாக இருக்கிறது என்பதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

WhatsAppWhatsAppFacebookFacebookXXTelegramTelegramCopy LinkCopy LinkShareShare
Thoonganagaram Admin

Recent Posts

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது – மதத்தில் அரசியல் வேண்டாம் என நீதிமன்ற எச்சரிக்கை

🛕 முருக பக்தர்கள் மாநாடு – ஜூன் 22ல் நடைபெறுகிறது பாஜகவின் (BJP) சார்பில், மதுரை மாவட்டத்தில் ஜூன் 22ம்…

1 மணி நேரம் ago

மதுரை கோட்டத்தில் ரயில் சேவையில் தற்காலிக மாற்றங்கள் – முழு விபரம் உள்ளே

மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல ரயில்களின் சேவையில் மாற்றங்கள் மற்றும் ரத்து…

1 மணி நேரம் ago

மீண்டும் வைகை ஆற்றில் இறைச்சி கழிவுகள் – பொதுமக்கள் அதிர்ச்சி, கடும் கண்டனம்!

மதுரை வைகை ஆற்றில், மீண்டும் இறைச்சி கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, நெல்பேட்டை பகுதியில், இந்த மாசுபாட்டு…

5 நாட்கள் ago

மதுரை பேருந்து மேலாளர் ஓட்டுநரை அடித்து வெளியான பரபரப்பு நாளை பேருந்துகள் இயங்காது!

மதுரை – ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பல்வேறு இடங்களுக்கு அதிக எண்ணிக்கையில்…

5 நாட்கள் ago

விஜய்யை கூட்டணியில் சேர்க்கலாம் – அமித்ஷாவின் முக்கிய டாஸ்க்!

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், பாஜக தலைவருமான அமித்ஷா, தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த புதிய…

5 நாட்கள் ago

விடுபட்ட மகளிருக்கு விரைவில் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் கூறிய புதிய தகவல்!

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட கருத்தப்புளியம்பட்டி பகுதியில், தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் புதிய…

5 நாட்கள் ago