தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில அளவிலான இரண்டாவது மாநாடு, மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தவெக நிர்வாகி நரேஷ், ‘ஓபன் டாக்’ நிகழ்ச்சியில் முக்கிய உரையாற்றினார்.
நரேஷ் கூறியதாவது:
“மதுரை மக்கள் எப்போதும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அதை திருவிழாவாகவே கொண்டாடுவார்கள். இப்போது விஜய் தலைமையில் நடக்கும் தவெக மாநாடு என்பது வெறும் அரசியல் நிகழ்வாக அல்ல; அது மக்கள் திரளும் விழா. தமிழகமெங்கிலும் இருந்து வரவிருக்கும் தொண்டர்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.”
“விழுப்புரத்தில் நடந்த கடந்த மாநாட்டை விட இந்த முறை மூன்று மடங்கு பரப்பளவில் மாநாடு நடக்கிறது. இதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
வாகன நிறுத்தும் இடம், உணவுப் பகுதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை தனியாக அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எளிதாக வரச்செய்ய போக்குவரத்து வசதிகளும் பரிசீலிக்கப்படுகின்றன.”
“தவெக மாநாட்டின் தேதி மாற்றப்படுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. தவெக மாநாட்டை விநாயகர் சதுர்த்தி காரணமாக தடை செய்வது திட்டமிட்ட முயற்சியாகும்.
ஆனாலும், இந்த தடைகளை கடந்து மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என்பது உறுதி.”
“தூய்மைப் பணியாளர்கள் 103 நாட்களுக்கு மேலாக போராடியும், அவர்களை அரசு அலட்சியமாகவே பார்த்தது. அவர்களை கைது செய்த பிறகு தான் முதல்வர் பேசியிருப்பது வருத்தமாக உள்ளது.
தற்போதைய அரசு, இந்த தொழிலாளர்களை வேலைக்காகப் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளியுள்ளது.”
“முதல்வர் ஒரு குழந்தையைப் போல் இருக்கிறார். அவரை நாற்காலியில் அமர வைத்து மற்றவர்கள் அரசியல் நடத்துகிறார்கள்.
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. அறிவிக்கப்படும் திட்டங்கள் நடைமுறைப்படுவதில்லை.
சாராயத்தை எதிர்த்த இளைஞர்கள் தாக்கப்பட்டும், சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக அரசு கூறுவது உண்மைக்கு புறம்பானது.”
“மாநாட்டில் நடிகர் விஜய் பேசவிருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் மாற்றம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அவர் பேச வாய்ப்பு உள்ளது.”
திமுக, அதிமுக ஆகிய பாரம்பரிய கட்சிகளால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில், தவெக மாநாடு புதிய அரசியல் மாற்றத்துக்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு அரசியல் நிலையை மாற்றுமா என்பதை நேரம் மட்டும் தான் சொல்லும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…