மார்கழி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று (டிசம்பர் 16) முதல் நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மார்கழி மாதத்தின் ஆன்மீக சிறப்பை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜைகள் மற்றும் புதிய நேர அட்டவணையை அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் திருவிழாக்களும், வழிபாட்டு நிகழ்ச்சிகளும் இடைவிடாது நடைபெறும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வரும் புனிதத் தலமாக திகழ்கிறது.
மார்கழி பிறப்பை முன்னிட்டு, டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடைபெற உள்ளன. அதிகாலை நேரத்தில் திருஞானசம்பந்தர் சன்னதியில் திருஞானபால் வழங்கும் சடங்கு நடைபெறும்.
இதனை முன்னிட்டு, கோவில் வெளிக்கோபுர கதவுகள் தினமும் காலை 3.30 மணிக்கே திறக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மார்கழி மாதத்தின் புனித பூஜைகளை பக்தர்கள் சிறப்பாக அனுபவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…