சமீபத்திய

தமிழ்நாட்டில் 4-வழிச் சாலை விரிவாக்கம் & 3,500 புதிய பேருந்துகள் – அமைச்சரின் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மீண்டும் கூட்டம் தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் அமைச்சர்கள் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். 3 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று நடைபெற்ற வினா விடைகள் நேரத்தில், தமிழ்நாடு மின்சார மற்றும் சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு ஒரு முக்கியமான அறிவிப்பை மேற்கொண்டார்.

அவர், மதுரையில் அவனியாபுரம் பெரியார் சிலை வரை 4 வழிச் சாலையை விரிவாக்குவதற்கான திட்ட அறிக்கை தற்போது தயார் செய்யப்படுவதாக தெரிவித்தார். மேலும், புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு தெற்கு வாசல் சந்திப்பு அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு இணையாக புதிய மேம்பாலம் கட்டப்படும் என அவர் கூறினார். இந்த திட்டம், அவனியாபுரம் முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் சந்திப்புக்கு இடையே விரிவாக்கத்திற்கு முன் நடைபெறவுள்ளது.

3,500 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு: போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அதேபோல், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 3,500 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக சட்டப்பேரவையில் தெரிவித்தார். புதிய பேருந்துகள் வருவதோடு, 15 ஆண்டுகளுக்கு மேலாக பழமை பெற்ற பேருந்துகளும் படிப்படியாக மாற்றப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்தப் புதிய பேருந்துகள், பொதுமக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

1 நாள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago