மதுரை மாவட்டம், அழகர் மலை கள்ளழகர் கோவிலில் வருகிற ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, அழகர் மலை உச்சியில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடலில் ஈடுபடுவார்கள்.
அந்நாளில் தீர்த்தமாடுவது பாக்கியங்களை அதிகரிக்கும் என மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தீர்த்தமாடிய பின்பு, பக்தர்கள் அங்குள்ள ராக்காயி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்து வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.
விழா நாளில் ராக்காயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. பக்தர்கள் நீராட வசதியாக நூபுரகங்கை தீர்த்த தொட்டி அடிவாரத்தில் மரத்தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதையடுத்து, அன்று இரவு அழகர் மலை அடிவாரத்தில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோவிலில் சந்தனம் சாத்து பணி நடைபெறும். பின்னர், கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி புறப்பாடு கண்டு மக்கள் புன்னகையுடன் பக்தி பரவசத்தில் மூழ்குவார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகத்தினரும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனர்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…