சமீபத்திய

8 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் மஞ்சமலை அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா

8 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் பிரசித்தி பெற்ற மஞ்சமலை அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு (குதிரை எடுப்பு) திருவிழா சிறப்பாக நடந்தது. இந்த திருவிழா 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கொண்டாடப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி கலந்து கொண்டனர்.

பாலமேடு அருகே வலையபட்டி பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு மாதங்களில் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 25ம் தேதி பூந்தமலை கொண்ட அய்யனார் சுவாமிக்கு பூணூல் சாற்றுதல் விழா நடைபெற்றது. அதன் பின்னர் வண்ணமயமான குதிரை, காளை, குழந்தை பொம்மை, பைரவர் சிலைகள், வீடு, ஆட்டோ போன்ற 1000க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கப்பட்டு, திருவிழா தினம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன.

திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வந்தனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் நோக்கத்தில் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சி இணையத்தில் வீடியோவாகவும் பிரபலமாகி வருகிறது.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago