இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள 17 அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான வங்கி சேவைகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வேடிஎம் மையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள்:
மேலும், பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளும் அஞ்சலக ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் தங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளை எளிதில் மேற்கொள்ளலாம்.
அஞ்சல் துறை தெரிவித்ததாவது:
“அலுவலக நேரங்களில் அஞ்சல் நிலையத்திற்கு வர முடியாத வாடிக்கையாளர்களுக்கான இது ஒரு முக்கியமான வசதி. புதிதாக தொடங்கப்பட்ட இந்த ஏடிஎம் சேவைகளை தங்களது அன்றாட வங்கித் தேவைகளுக்கு பயனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்,” என தெரிவித்துள்ளது.
📍 மொத்தம்: 17 அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகள் – தெற்கு மண்டலத்தில் முழுமையாக மீண்டும் செயல்பாட்டில்!
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…