மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர்.
திருமங்கலம் காமராஜபுரத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை, தேவர் சிலை அருகே தொடங்கி மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணியின் போது சாலையில் இருந்த தார் அகற்றப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் தூசு கிளம்பி பரவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, காமராஜபுரம் மற்றும் கற்பகநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தூசி மண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள், மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், தூசி பரவாமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…