மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர்.
திருமங்கலம் காமராஜபுரத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை, தேவர் சிலை அருகே தொடங்கி மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணியின் போது சாலையில் இருந்த தார் அகற்றப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் தூசு கிளம்பி பரவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, காமராஜபுரம் மற்றும் கற்பகநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தூசி மண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள், மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், தூசி பரவாமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…