மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, விமானநிலையச் சாலையில் தூசு பறப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர்.
திருமங்கலம் காமராஜபுரத்தில் இருந்து வேளாண்மை விரிவாக்க மையம் வரை, தேவர் சிலை அருகே தொடங்கி மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சர்வீஸ் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணியின் போது சாலையில் இருந்த தார் அகற்றப்பட்டதால், சாலை குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் தூசு கிளம்பி பரவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, காமராஜபுரம் மற்றும் கற்பகநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தூசி மண்டலத்தால் அலர்ஜி, மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள், மேம்பாலப் பணிகளை விரைவில் முடிக்கவும், தூசி பரவாமல் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…