மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள மதுரை விமான நிலையம், தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த விமான நிலையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, 24 மணி நேர சேவையுடன் இயங்கிவருகிறது.
இங்கு தற்போது துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாட்டு சேவைகளுடன், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் இயங்குகின்றன. சமீபத்தில் பயணிகளின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையிலிருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.
மேலும், கூடுதல் விமான சேவைகளை இயக்கும் நோக்கில், விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானது, 2021-ல் தொடங்கிய புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணி. ரூ.88 கோடி நிதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோபுரம் தற்போது முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இதன் செயல்பாட்டால் மதுரை விமான நிலையத்தின் சேவைத்திறன் மேலும் உயர்ந்து, பயணிகளுக்கான அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…