மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள மதுரை விமான நிலையம், தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த விமான நிலையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, 24 மணி நேர சேவையுடன் இயங்கிவருகிறது.
இங்கு தற்போது துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாட்டு சேவைகளுடன், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் இயங்குகின்றன. சமீபத்தில் பயணிகளின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையிலிருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.
மேலும், கூடுதல் விமான சேவைகளை இயக்கும் நோக்கில், விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானது, 2021-ல் தொடங்கிய புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணி. ரூ.88 கோடி நிதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோபுரம் தற்போது முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இதன் செயல்பாட்டால் மதுரை விமான நிலையத்தின் சேவைத்திறன் மேலும் உயர்ந்து, பயணிகளுக்கான அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…