மதுரை விமான நிலையத்தில் புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் (ATC Tower) ரூ.88 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு, வரும் ஜனவரி மாத இறுதியில் செயல்பாட்டுக்கு வர உள்ளது என விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரம் அருகே அமைந்துள்ள மதுரை விமான நிலையம், தென் மாவட்ட மக்களுக்கு மிக முக்கியமான போக்குவரத்து மையமாக உள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த விமான நிலையம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, 24 மணி நேர சேவையுடன் இயங்கிவருகிறது.
இங்கு தற்போது துபாய், சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாட்டு சேவைகளுடன், டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட உள்நாட்டு சேவைகளும் இயங்குகின்றன. சமீபத்தில் பயணிகளின் வருகை அதிகரித்ததை முன்னிட்டு, மதுரை விமான நிலையம் 3-ம் தரநிலையிலிருந்து 2-ம் தரநிலைக்கு உயர்த்தப்பட்டது.
மேலும், கூடுதல் விமான சேவைகளை இயக்கும் நோக்கில், விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான ஓடுதளம் (Runway) விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதில் முக்கியமானது, 2021-ல் தொடங்கிய புதிய வான்வழிக் கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கும் பணி. ரூ.88 கோடி நிதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த கோபுரம் தற்போது முழுமையாக முடிவடைந்து, சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இதன் செயல்பாட்டால் மதுரை விமான நிலையத்தின் சேவைத்திறன் மேலும் உயர்ந்து, பயணிகளுக்கான அனுபவமும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…