மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக பரவிய செய்திகளுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
“திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அரசு கூடுதல் தகவல்களை மட்டுமே கேட்டுள்ளது”
என்று தெளிவுபடுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் முன், அவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
“தமிழக விவசாயிகளுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவிக்காக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. விரிவான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களையே கேட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குத்தான் நாட்டிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா?
திட்டங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதைப் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும்.
மெட்ரோ விவகாரத்தில் மக்களிடம் அவநம்பிக்கை உருவானதற்கு மாநில அரசுதான் காரணம்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித் திருவிழா, இன்று (ஜூலை…
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்திற்குட்பட்ட பாப்பி நாயக்கன்பட்டி–சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள சல்லுப்பன் கரடு அடிவாரத்தில் சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானதாகக்…
மதுரை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாதாந்திர…
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பாதை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் நாளை (ஜூலை 18) திட்டமிட்ட மின்தடை…
தமிழகத்தின் சேலம் மற்றும் மதுரை ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட…
மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆடித்…