மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக பரவிய செய்திகளுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
“திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அரசு கூடுதல் தகவல்களை மட்டுமே கேட்டுள்ளது”
என்று தெளிவுபடுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் முன், அவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
“தமிழக விவசாயிகளுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவிக்காக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. விரிவான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களையே கேட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குத்தான் நாட்டிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா?
திட்டங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதைப் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும்.
மெட்ரோ விவகாரத்தில் மக்களிடம் அவநம்பிக்கை உருவானதற்கு மாநில அரசுதான் காரணம்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…