மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக பரவிய செய்திகளுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
“திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அரசு கூடுதல் தகவல்களை மட்டுமே கேட்டுள்ளது”
என்று தெளிவுபடுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் முன், அவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
“தமிழக விவசாயிகளுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவிக்காக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. விரிவான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களையே கேட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குத்தான் நாட்டிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா?
திட்டங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதைப் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும்.
மெட்ரோ விவகாரத்தில் மக்களிடம் அவநம்பிக்கை உருவானதற்கு மாநில அரசுதான் காரணம்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…