மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்ததாக பரவிய செய்திகளுக்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
“திட்டங்கள் நிராகரிக்கப்படவில்லை; மத்திய அரசு கூடுதல் தகவல்களை மட்டுமே கேட்டுள்ளது”
என்று தெளிவுபடுத்தினார்.
கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் முன், அவரை வரவேற்க கோவை விமான நிலையம் வந்த தமிழிசை செளந்தரராஜன், செய்தியாளர்களிடம் பேசியபோது:
“தமிழக விவசாயிகளுக்காக பல திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்து வருகிறார். ஆனால், முதல்வர் மு.க. ஸ்டாலின் உதவிக்காக கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரிக்கவில்லை. விரிவான ஆவணங்கள் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப விவரங்களையே கேட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டுக்குத்தான் நாட்டிலேயே அதிகமான வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும்போது, மத்திய அரசு மெட்ரோ திட்டத்தை கொடுக்காதா?
திட்டங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதைப் பார்த்துதான் அனுமதி வழங்கப்படும்.
மெட்ரோ விவகாரத்தில் மக்களிடம் அவநம்பிக்கை உருவானதற்கு மாநில அரசுதான் காரணம்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…