மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் மூன்றாவது நாளான இன்று, கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். இன்று மாலை 6.15 மணிக்கு, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க அவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளுகிறான்.
இந்த திருவிழா மே 8 முதல் 17 வரை நடைபெற்று வருகிறது. விழாவின் முதல் நாளில் சுந்தரராஜ பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் எழுந்தருளினார். இரண்டாவது நாளான நேற்றும், மூன்றாவது நாளான இன்று காலை தோளுக்கினியான் பல்லக்கில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
மாலை 5.45 மணிமுதல் 6.05 மணிக்குள், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி “அருவாரி” நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மே 17 அன்று உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறும்.
இந்த விழாவின் ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் கோயில் துணை ஆணையர் ந. யக்ஞ நாராயணன் தலைமையில், அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் ஒருங்கிணைத்துள்ளனர்.
அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் புறப்படுவதில் துவங்கி, மீண்டும் அழகர்மலைக்கு திரும்புவது வரை கள்ளழகர் செல்லும் வழித் தடங்களை கூகுள் மேப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🔗 Track Alagar சேவையை பயன்படுத்தி உங்கள் பயணத்தை எளிதாக்குங்கள்! 📲 Click here to track Alagar LIVE!
இந்த Track Alagar சேவையை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அனைவரும் கள்ளழகர் அவரின் திருவிழா பயணத்தை நேரடியாக கண்காணிக்க உதவுங்கள்! 🙏
எங்களின் இந்த வசதியை பயன்படுத்தி அழகரை சிரமமின்றி தரிசித்து அருள்பெற அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
📲 LIVE Tracking-ஐ இப்போது முயற்சிக்க: Click here to Track
🌐 வருகை தருக: www.thoonganagaram.com
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…