மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வுகள் ஒன்றான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா, மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🔹 தாம்பரம் → மதுரை
📍 புறப்பாடு: இன்று இரவு 11.30 மணி
📍 வருகை: நாளை காலை 7.55 மணி
🔹 மதுரை → தாம்பரம்
📍 புறப்பாடு: மே 12-ம் தேதி, இரவு 11.30 மணி
📍 வருகை: மே 13, காலை 7.50 மணி
இந்த ரயில் சேவை செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் ரோடு வழியாக செல்லும்.
🎟️ டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதால், பயணிக்க விரும்புவோர் உடனே பதிவு செய்து பயன் பெறலாம்!
🚌 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மக்கள் திரளுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு…
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை நேரில் காண விரும்பும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ…
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 16-ம் தேதி இரவு 10 மணி முதல் செப்டம்பர் 17-ம்…
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 5,400…
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன்’ தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது…