மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வுகள் ஒன்றான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா, மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🔹 தாம்பரம் → மதுரை
📍 புறப்பாடு: இன்று இரவு 11.30 மணி
📍 வருகை: நாளை காலை 7.55 மணி
🔹 மதுரை → தாம்பரம்
📍 புறப்பாடு: மே 12-ம் தேதி, இரவு 11.30 மணி
📍 வருகை: மே 13, காலை 7.50 மணி
இந்த ரயில் சேவை செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் ரோடு வழியாக செல்லும்.
🎟️ டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதால், பயணிக்க விரும்புவோர் உடனே பதிவு செய்து பயன் பெறலாம்!
🚌 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மக்கள் திரளுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…
மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…
மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…
தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…
தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…