மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. முக்கிய நிகழ்வுகள் ஒன்றான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா, மே 12-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்வை காண தமிழ் நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🔹 தாம்பரம் → மதுரை
📍 புறப்பாடு: இன்று இரவு 11.30 மணி
📍 வருகை: நாளை காலை 7.55 மணி
🔹 மதுரை → தாம்பரம்
📍 புறப்பாடு: மே 12-ம் தேதி, இரவு 11.30 மணி
📍 வருகை: மே 13, காலை 7.50 மணி
இந்த ரயில் சேவை செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் ரோடு வழியாக செல்லும்.
🎟️ டிக்கெட் முன்பதிவு தற்போது துவங்கியுள்ளதால், பயணிக்க விரும்புவோர் உடனே பதிவு செய்து பயன் பெறலாம்!
🚌 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன – மக்கள் திரளுக்கு மாவட்ட நிர்வாகம் முழுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…
மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…
மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…
மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…