மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை குறித்து திடுக்கிடும் பதில் அளித்தார்.
அதிமுகவில் சமீபத்தில் இணைந்த ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியின் திருமண நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
அதற்கு வருகை தந்த பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் தலைமையில் அதிமுக தொண்டர்கள் சிறப்பாக வரவேற்றனர்.
செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து கேட்ட போது,
பழனிசாமி பதிலளித்ததாவது:
🗨️ “அவரைப் பற்றிக் கேட்க என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? அவர் அதிமுகவில் இல்லை.
அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் எங்களுக்கு என்ன?
அதற்குப் பதில் சொல்ல எனக்கு அவசியமில்லை.”
🗨️ “ஒவ்வொருவருக்கும் தங்களது கருத்து சொல்லும் உரிமை உண்டு.
ஒருவரின் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது.
அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்;
அவரைப் பற்றி நான் கருத்து சொல்ல அவசியமில்லை.”
பின்னர் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியேறினார்.
மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…
பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…
தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…
பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…
காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…