சமீபத்திய

மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுவில், ஏற்கெனவே பதவி வகித்து வந்த பழைய உறுப்பினர்களையே தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் அறங்காவலர் குழுத் தலைவராக தேர்வாக உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலின் தக்காராக கடந்த 18 ஆண்டுகள் பணியாற்றிய கருமுத்து தி. கண்ணன் மறைவுக்குப் பிறகு, தற்காலிகமாக இந்துசமய அறநிலையத் துறை அதிகாரி தக்காராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 2023 நவம்பர் மாதம் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் ருக்மணி பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் இடம்பெற்ற நிலையில், அவர்கள் டிசம்பர் மாதம் பதவியேற்றனர். பின்னர், ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், அறங்காவலர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய நியமனம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த பலரும் அறங்காவலர் பதவிக்கு முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே இருந்த அறங்காவலர்களின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம், பழைய அறங்காவலர் குழுவே தொடர்வதுடன், ருக்மணி பழனிவேல்ராஜன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago