சமீபத்திய

மதுரையில் வெப்ப அலை எச்சரிக்கை, மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

மதுரை மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பொதுமக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைவதால் தலைசுற்றல், உடல் சோர்வு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதிக்கப்படும் மக்கள் மற்றும் பகுதிகள்
மதுரை மாநகர், மதுரை மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள், திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பச்சிளம் மற்றும் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள்.

வெப்பத்தின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள்
அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்து குறைவு, உடலில் உப்புச்சத்து குறைவு, அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மயக்கம், வலிப்பு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம்.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
தாகம் இல்லாவிட்டாலும் போதிய அளவு குடிநீர் பருகுதல், வெளியே செல்லும் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்லுதல், மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு, ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீர்ச்சத்து பானங்கள் அருந்துதல், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், காற்றோட்டமான இடங்களில் தங்குதல், மெல்லிய பருத்தி ஆடைகள் அணிதல், வெளியில் செல்லும்போது குடை அல்லது தலைக்கவசம் பயன்படுத்துதல்.

தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் முதலுதவி நடவடிக்கைகள்
மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்தல், குழந்தைகளை மதிய வேளையில் வெளியில் விளையாட அனுமதிக்காதல், வெறுங்காலுடன் வெயிலில் நடக்காதல், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்த்தல், வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் பெற்று அருந்துதல் மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுதல்.

“கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவிகள்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நலத்திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு, பார்வையற்றோர் மற்றும் வாய்,…

1 நாள் ago

மதுரையில் அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை தொடக்கம்

மதுரையின் மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை அமைப்பு…

2 நாட்கள் ago

சட்ட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்? ஐகோர்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த இந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை…

3 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி விழா இன்று அழகர்கோவிலில் திருத்தேர் ஆண்டுக்கு ஒருமுறை கருப்பசாமி சன்னதி கதவு திறப்பு

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் ஆடித் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்ச்சிகள் இன்று (29.07.2026)…

4 நாட்கள் ago

இன்று கள்ளழகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளல்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித் திருவிழா பக்தர்கள் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (28.07.2026)…

5 நாட்கள் ago

மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் சிவப்பு சிக்னல்

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் மீண்டும் நிராகரிப்பு சென்னை: மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தும் அளவுக்கு…

6 நாட்கள் ago