சமீபத்திய

மதுரையில் வெப்ப அலை எச்சரிக்கை, மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது

மதுரை மாவட்டத்தில் கடும் கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் பொதுமக்களுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகரித்து வரும் வெப்ப அலை காரணமாக உடலில் நீர்ச்சத்து மற்றும் உப்புச்சத்து குறைவதால் தலைசுற்றல், உடல் சோர்வு உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதல்களை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாதிக்கப்படும் மக்கள் மற்றும் பகுதிகள்
மதுரை மாநகர், மதுரை மாவட்டத்தின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகள், திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பச்சிளம் மற்றும் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள்.

வெப்பத்தின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள்
அதிக வியர்வை காரணமாக நீர்ச்சத்து குறைவு, உடலில் உப்புச்சத்து குறைவு, அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசை பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், மயக்கம், வலிப்பு போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம்.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
தாகம் இல்லாவிட்டாலும் போதிய அளவு குடிநீர் பருகுதல், வெளியே செல்லும் போது குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்லுதல், மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு, ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீர்ச்சத்து பானங்கள் அருந்துதல், பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், காற்றோட்டமான இடங்களில் தங்குதல், மெல்லிய பருத்தி ஆடைகள் அணிதல், வெளியில் செல்லும்போது குடை அல்லது தலைக்கவசம் பயன்படுத்துதல்.

தவிர்க்க வேண்டிய செயல்கள் மற்றும் முதலுதவி நடவடிக்கைகள்
மதியம் 12 மணி முதல் 3.30 மணி வரை தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்தல், குழந்தைகளை மதிய வேளையில் வெளியில் விளையாட அனுமதிக்காதல், வெறுங்காலுடன் வெயிலில் நடக்காதல், செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்த்தல், வெப்பத்தால் பாதிப்பு ஏற்பட்டால் அருகிலுள்ள அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ORS கரைசல் பெற்று அருந்துதல் மற்றும் மருத்துவ ஆலோசனை பெறுதல்.

“கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் 45 நாள் அரசுப் பொருட்காட்சி… ஜூன் 14ல் தொடக்கம்!

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப் பொருட்காட்சி–2026 தொடக்க விழா ஜூன் 14ஆம் தேதி…

1 நாள் ago

கோவிலில் VIP கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் ரமேஷ்

மதுரையில் உலகப் புகழ்பெற்ற Meenakshi Amman Temple கோவிலுக்கு வழிபாட்டிற்காக வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எந்தவித அரசியல் பந்தாவும்,…

2 நாட்கள் ago

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்புக்கு பயிற்சி

மதுரை திருநகரில் செயல்பட்டு வரும் பாண்டியநாடு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் 2026–27 கல்வியாண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப்…

3 நாட்கள் ago

மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம்? அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் மீன்பிடி தடைகால நிவாரணத் தொகையை தற்போதைய ரூ.8,000-இலிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது…

4 நாட்கள் ago

கள் விற்பனைக்கு தடை ஏன்? நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கள் விற்பனைக்கு அரசு ஏன் அனுமதி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ள நிலையில்,…

5 நாட்கள் ago

குடிநீர் முதல் குப்பை வரை நேரடி ஆய்வு களத்தில் புதிய ஆணையர்

மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள கௌரவ் குமார் ஐ.ஏ.எஸ்., நகரில் குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார…

6 நாட்கள் ago