சமீபத்திய

மதுரை மீனாட்சி கோயிலில் கடும் பாதுகாப்பு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணி

ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, மதுரை நகரில் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் மீனாட்சி கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான சோதனைகளை விட தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயிலுக்குள் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில்நிலையம், பேருந்து நிலையங்கள் (மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர்., பெரியார், ஆரப்பாளையம்) உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய பொருட்கள் அல்லது நபர்களைப் பார்த்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Thoonganagaram Admin

Recent Posts

மதுரையில் சோகம்… கனமழையில் சுவர் இடிந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

மதுரை, வளையங்குளம்:தமிழகத்தில் சில தினங்களாகவே மழை வௌ்ளிப்படியாக பெய்து வருகிறது. கோடை வெயிலை தணிக்கவும், குளிர்ச்சியூட்டவும் இந்த மழை காரணமானாலும்,…

19 மணி நேரங்கள் ago

மதுரை சுற்றுலாவில் மெகா ஹிட் – வெளிநாட்டவர்கள் வருகை அதிகரிப்பு!

2.75 கோடி பேர் வருகை – வெளிநாட்டினர் கூடுதலாக குவிந்து வருகிறார்கள்! மதுரை:இந்தியாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மதுரை…

19 மணி நேரங்கள் ago

மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி – ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும்!

பல்லாயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மதுரை டைடல் பார்க் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியுள்ளது. திட்டத்திற்கெதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு…

19 மணி நேரங்கள் ago

செம வாய்ப்பு! IOB வங்கியில் வேலை – தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

இண்டியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 2025–26 காலாண்டிற்கு 400 உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) பணியிடங்களை நிரப்ப…

19 மணி நேரங்கள் ago

மே 20, 2025 மதுரையில் தங்கம் விலை பெரும் சரிவு

மதுரை / கோவை:இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சரிவும் ஏற்றமும் காணப்பட்ட நிலையில்,…

20 மணி நேரங்கள் ago

சித்திரை திருவிழா – மதுரை வந்தடைந்தது வைகை நீர்!

மதுரை மாவட்டத்தின் முக்கியமான விழாவான சித்திரைத் திருவிழா, கடந்த மே 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவின் சிறப்புக்குணமான…

2 வாரங்கள் ago