சமீபத்திய

மதுரை மீனாட்சி கோயிலில் கடும் பாதுகாப்பு – காஷ்மீர் தாக்குதலின் பின்னணி

ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.

செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, மதுரை நகரில் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் மீனாட்சி கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான சோதனைகளை விட தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோயிலுக்குள் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில்நிலையம், பேருந்து நிலையங்கள் (மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர்., பெரியார், ஆரப்பாளையம்) உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய பொருட்கள் அல்லது நபர்களைப் பார்த்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

Thoonganagaram Admin

Recent Posts

2026 மதுரை சித்திரை திருவிழா முழு அட்டவணை வெளியீடு

மதுரையில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

3 நாட்கள் ago

பெண்களை காக்க மதுரையில் புதிய சுகாதார திட்டம்

பெண்களை அதிகமாக பாதிக்கும் கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கான ஹெச்பிவி (HPV)…

4 நாட்கள் ago

பக்தர்கள் கவனம் சந்திர கிரகணம் காரணமாக கோயில்கள் இன்று நடை அடைப்பு

தமிழகத்தில் இன்று (மார்ச் 3) பிற்பகல் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை நிகழவுள்ள 2026 ஆம்…

5 நாட்கள் ago

மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. கடந்த…

6 நாட்கள் ago

பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்

பிரதமர் நாளை மாலை மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதை முன்னிட்டு, நகரம்…

1 வாரம் ago

இரண்டரை மாதத்தில் அரசு வேலை இபிஎஸ் உறுதி

காவல் துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படாதது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேர்வு முடிவுகளை…

1 வாரம் ago