ஜம்மு-காஷ்மீரில் பெஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இந்த கொடூர தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உட்பட 26 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, மதுரை நகரில் முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தரும் மீனாட்சி கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமான சோதனைகளை விட தீவிரமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோயிலுக்குள் மற்றும் சுற்றுப்புறங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை ரயில்நிலையம், பேருந்து நிலையங்கள் (மாட்டுத்தாவணி, எம்.ஜி.ஆர்., பெரியார், ஆரப்பாளையம்) உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சந்தேகத்துக்குரிய நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் சந்தேகத்துக்குரிய பொருட்கள் அல்லது நபர்களைப் பார்த்தால், உடனடியாக காவல் துறைக்கு தகவல் வழங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள தங்கும் விடுதிகளிலும், சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம், நாகமலை புதுக்கோட்டை, வாடிப்பட்டி, ஒத்தக்கடை மற்றும் திருமங்கலம் உள்ளிட்ட 5 சார் பதிவாளர் அலுவலகங்களில்…
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், தேனி, மதுரை,…
மதுரையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2026–27 கல்வியாண்டுக்கான டிப்ளமோ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 1946-ஆம்…
மதுரை வில்லாபுரம் மலர் சந்தையின் பின்புறத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய (TNHB) குடியிருப்புகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி…
மதுரை மாவட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு நாளை (ஜூன் 3, 2026) பல்வேறு பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை…
கோடை விடுமுறை நிறைவடைந்து ஜூன் முதல் வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை நோக்கி திரும்பும் பயணிகளின்…