மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி துறையின் தகவலின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை இருப்பதால் மாணவர்களிடமிருந்து ரத்தம் பெறும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா கூறியதாவது:
“2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில், 208 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 30,047 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கல்லூரிகளில் நடத்தப்பட்ட முகாம்களே. தற்போது மட்டுமே 1050 யூனிட் ரத்தம் இருக்கின்றது. ஆனால், மருத்துவமனையில் தினமும் 150 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.”
மருத்துவமனையில் தட்டணுக்கள் மட்டும் பிரித்து பெறும் இயந்திரம் உள்ளது.
தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள், சிட்கோ, ஐ.டி. நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் – யாரும் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய முன்வரலாம்.
முகாம் ஏற்பாடு செய்ய அழைக்க வேண்டிய எண்கள்:
📞 82489 23925
📞 94438 30163
மதுரை சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) கோலாகலமாக நடைபெற்றன. காலை மற்றும் இரவு…
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான ஏப்ரல் 20, 2026 திங்கட்கிழமை, காலை 7 மணியளவில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய இறைவன் நான்கு…
மதுரை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (ஏப்ரல் 19, 2026, ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக…
மதுரையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வருகையால் நாளை நகரில்…
நேரலை கண்காணிப்பு · 19–29 ஏப்ரல் 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக் செய்யவும் Track Meenakshi…
நேரலை கண்காணிப்பு · 29 ஏப்ரல் – 6 மே 2026 📍 இணையதளம் மூலம் கண்காணிக்க இங்கே கிளிக்…