மதுரை அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி துறையின் தகவலின்படி, மே மற்றும் ஜூன் மாதங்களில் ரத்ததான பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே, கல்லூரிகளில் செமஸ்டர் விடுமுறை இருப்பதால் மாணவர்களிடமிருந்து ரத்தம் பெறும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்தவங்கி துறைத்தலைவர் சிந்தா கூறியதாவது:
“2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில், 208 ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 30,047 யூனிட்கள் ரத்தம் பெறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கல்லூரிகளில் நடத்தப்பட்ட முகாம்களே. தற்போது மட்டுமே 1050 யூனிட் ரத்தம் இருக்கின்றது. ஆனால், மருத்துவமனையில் தினமும் 150 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது.”
மருத்துவமனையில் தட்டணுக்கள் மட்டும் பிரித்து பெறும் இயந்திரம் உள்ளது.
தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஜவுளிக்கடைகள், சிட்கோ, ஐ.டி. நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் நண்பர்கள் குழுக்கள் – யாரும் ரத்ததான முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய முன்வரலாம்.
முகாம் ஏற்பாடு செய்ய அழைக்க வேண்டிய எண்கள்:
📞 82489 23925
📞 94438 30163
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேக விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் நாளை தொடங்கி செப்டம்பர் 11…
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள இஸ்கான் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோவிலில் இன்று, செப்டம்பர் 4, 2026 அன்று,…
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காப்பாளர்கள் மற்றும்…
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், கோவில் நிர்வாகம்செப்டம்பர் 11 முதல் 16 வரை மூலவர் தரிசனம்…
ஜல்லிக்கட்டு குறித்து தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்துகளைக் கண்டித்தும், தவெக அரசைக் கண்டித்தும் செப்டம்பர் 3-ஆம்…
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சோலமலை பொறியியல் கல்லூரி, தரமான தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியை வழங்குவதுடன், மாணவர்களின் திறன்…